ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் இடையே போட்டி.. தேர்தல் நேரத்தில் உண்மையை உடைத்த நிதின் நபின்! – nitin nabin says there is rivalry between father mk stalin and son udhayanidhi in corruption

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலில் ஈடுபட்டு வருவதாக நிதின் நபின் குற்றம் சாட்டி இருக்கிறார்.

எக்சிபிஷன் போட்டா கூட்டம் கூடும்- விஜய்யை தாக்கி பேசிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் மாநிலம் முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பாஜக ஆலோசனை கூட்டம்

அந்த வகையில், தஞ்சை தொகுதியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தஞ்சைக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 13 ஆம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம், தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்

நிதின் நபின் பேச்சு

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபின், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தார். தற்போது தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், ஊழல் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த குடும்ப ஆட்சியை மக்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் இடையே போட்டி

மேலும், நாடு முழுவதும் வளர்ச்சி பணிகள் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ஊழலில் முதன்மையானதாக உள்ளது எனவும் தெரிவித்தார். குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சித்தார்.

போதைப் பழக்கம்

இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் சூழல் தமிழகத்தில் உருவாகி வருவதாகவும், போதைப்பொருள் புழக்கம் கவலைக்குரிய அளவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தஞ்சை டெல்டா பகுதி விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்களின் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

கிசான் சம்மான் நிதி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘கிசான் சம்மான் நிதி’ போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு திமுக அரசு அநீதி செய்கிறது என குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பும் மரியாதையும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

எக்சிபிஷன் போட்டா கூட்டம் கூடும்- விஜய்யை தாக்கி பேசிய உதயநிதி ஸ்டாலின்

காசி தமிழ் சங்கமம்

மேலும், ‘காசி தமிழ் சங்கமம்’ போன்ற நிகழ்வுகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்தது மத்திய அரசு எனவும், ஆனால் தமிழக அரசு சனாதன மரபுகளை இழிவுபடுத்துகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார். தீப வழிபாடு போன்ற பாரம்பரிய நடைமுறைகளை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை

மீன்பிடித் தொழிலும் சுற்றுலாத் துறையும் சிறப்பாக வளர வேண்டிய தஞ்சை பகுதி, தற்போதைய ஆட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் MSME துறையின் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்தி, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.