ஸ்டாலினுக்கு பீகார் மாதிரி தமிழகமும்.. டெல்லியில் அமித்ஷாவிடம் சொன்னது இதுதான் -டிடிவி தினகரன்! – ttv dhinakaran met and held talks with union home minister amit shah at his residence in delhi

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.

amit shah and ttv dhinakaran(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து அன்புமணி டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர் அடுத்தடுத்து டெல்லிக்கு சென்றது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், இன்று டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் அமைச்சரின் வீட்டில் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர் என்ற முறையில் அமித்ஷாவுடன் சந்திப்பு நடந்துள்ளது.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

இந்த முறை நடைபெற்ற சந்திப்பானது தேர்தலில்,தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்,எப்படி திமுகவை வீழ்த்துவதற்கு 234 தொகுதிகளிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் தொடர்ந்து டெல்லிக்கு வருவதை திமுக அதன் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைப்பது குறித்த கேள்விக்கு?தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி ஆகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என். டி. ஏ கூட்டணி அமைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு தேசிய கட்சி அவர்கள் நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வர முடியுமா குறிப்பாகமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வர முடியுமா நாங்கள் டெல்லி வருவது தவறா? நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பயம் வந்து விடுகிறது.
இந் த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.மேலும்,பீகாரில் எவ்வாறு வெற்றி பெற்றார்களோ, அதுபோல தமிழகத்தில் ஆட்சி அமைபதற்கான ஆலோசனைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கியதாக கூறினார்.இதனைத் தொடர்ந்து , வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் நீங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு? இந்த முறை நான் போட்டியிட போவத்திலை.
தொடர்ந்து, அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லிக்கு வருவதை ,முதல்வர் மற்றும் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட தலைவர்கள் டெல்லிதான் ஆட்டி படைக்கிறது என்று கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்த கேள்விக்கு?எங்க கூட்டணித் தலைவர்கள் டெல்லி வந்தால் பயம் வந்துவிட்டது.தற்பொது தமிழகத்தில் தேவையான நிதியை வாங்கி தருவார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மத்திய அரசுடன் சுமுகமாக இல்லாமல் குழாயடி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறது திமுக. அதுமட்டுமில்லாமல் தேர்தல் நேரம் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படியான சூழலில் எப்படி தமிழ்நாட்டிற்கான நிதியை பெற்றுத்தர முடியும்.சிஎஸ்கே தமிழ்நாடு அணியினர் நாம் இருக்கிறோம் அதற்கு தலைமை தாங்குவது தோனி. அதில் இருப்பது எத்தனை பேர் தமிழ்நாட்டு வீரர்கள் அதற்கு போய் முதல் வரை போட சொல்லுங்கள் டெல்லி தமிழ்நாடு என்று பேசி இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறினார்.