ஸ்டாலின் – கனிமொழி பஞ்சாயத்து, கலைஞர் டிவிக்கு மாறிய பணம்- ஆ.ராசா சர்ச்சை ஆடியோ வைரல்! – maridhas released a raja controversial audio against mk stalin dmk family

திமுக எம்.பி ஆ.ராசா பேசிய பழைய ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக மாரிதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு விவாதப் பொருளாக மாற்றியிருக்கிறார்.

DMK MP A Raja Audio Viral by Maridhas(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், திமுகவில் பெரிய பூகம்பத்தை உண்டாக்கும் வகையில் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா பேசியிருக்கும் ஆடியோ. இதனை யூ-டியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒன்று, இரண்டு என அடுத்தடுத்து இரண்டு பகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

முதல் பகுதி ஆடியோ:

2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை சந்திக்க திமுக எம்.பி அல்லது எம்.எல்.ஏ அல்லது கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா? தான் கைதாகி இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை ஒவ்வொருவராக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். அதுவரை யாருமே வரவில்லை. அப்போது தன் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

கலைஞர் டிவிக்கு கைமாறிய பணம்

அந்த சமயத்தில் நான் Burst ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்? கலைஞர் டிவிக்கு பணம் சென்றது. என் வீட்டில் ஏதாவது சிபிஐ எடுத்தார்களா? எனக் கேட்கிறார். ஒருநாள் அழகிரி நேரில் வந்து சந்திக்கிறார். கலைஞர் டிவிக்கு வாங்கி கொடுத்தது எல்லாம் ஸ்டாலின் தானாம். நீயும், கனிமொழியும் ஏன் சிறையில் இருக்கிறீர்கள். அப்ரூவராகி விட்டு வெளியே வர வேண்டியது தானே? என்றார்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

இரண்டாம் பகுதி ஆடியோ:

கலைஞருக்கு பிறகு கட்சிக்கு அவரிடம் போகும். ஆனால் என்னை விட்டு போகாது. ஆறு மாதமோ, ஒரு வருடமோ அதன்பிறகு காட்சிகள் மாறும். குறிப்பாக தான் வெளியே வந்துவிட்டால் ஹீரோ என்கிறார். புத்தகம் ஒன்று வெளியே வரப் போகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும். இந்து என்.ராம் படித்து விட்டு மலைத்து போய்விட்டார். என்ன சார், இந்த வெளு வெளுத்துவிட்டீர்கள் என என்னிடமே கேட்கிறார். அதில் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என அனைவரையும் பிச்சு எடுத்திருக்கிறேன்.

ஆ.ராசா எழுதிய புத்தகம்

அந்த புத்தகம் வெளியே வந்ததும் ஒரு ஸ்டாராக மாறும். அது வெளிவரும் வரை அடக்கி வாசிப்பேன். அதன்பிறகு எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொள்வேன். என்னை யாரும் எஸ்.சியாக பார்ப்பதில்லை. இடைநிலை சாதியினர் யாராக இருந்தாலும் எனக்கு மரியாதை அளிக்கின்றனர். போதுமான பணம் இருக்கிறது. மூளை இருக்கிறது. அப்புறம் என்ன வேண்டும் எனக் கேட்கிறார். கலைஞர் போய்விட்டால் ஸ்டாலின் – கனிமொழி பஞ்சாயத்து வரும்.

ஸ்டாலின் ஒன்றும் எம்.ஜி.ஆர் இல்லை

எங்க டெல்லிக்கு போய் ஆங்கிலத்தில் பேசிவிடுவாரா ஸ்டாலின் எனக் கேட்கிறார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது தங்கையை ஸ்டாலின் ஒருபோதும் நம்ப மாட்டார். அப்படியெனில் என்னை வெளியே தள்ள முடியாது. தன்னை எம்.ஜி.ஆர் என நினைத்து கொண்டிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு பின்னர் தான் இவருக்கு setback வரும். தற்போதைய சூழலில் தலைவரே கைதி மாதிரி இருக்கிறார். ஸ்டாலின் Takeover பண்ணிட்டார் என்று ஆ.ராசா பேசுவது போல் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.