ஸ்ரீபெரும்புதூர் டூ நாவலூர் சாலை விரிவாக்கம்… சென்னை பைபாஸ் ரூட்டில் விரைவு பயணம்- நெருக்கும் 3 சிக்கல்கள்! – sriperumbudur to navalur corridor project bypass central chennai merits and demerits

சென்னையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கும் வகையில் தொழிற்பேட்டை மற்றும் ஐடி ஹப் இணைப்பு சாலை விரிவாக்க திட்டத்தால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று தெரிய வருகிறது. அதேசமயம் சில சிக்கல்களையும் கடந்து வர வேண்டியுள்ளது.

Sriperumbudhur to Navalur Highways Road
ஸ்ரீபெரும்புதூர் என்பது ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் முனையமாக திகழ்கிறது. இதை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள், குடியிருப்புகள் இருக்கின்றன. ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூரில் ஐடி நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதுமட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் எளிய மக்களின் வீடுகள் வரை பரவலாக காணப்படுகின்றன.

இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் சாலையானது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்காமல் பைபாஸ் செய்து செல்கிறது. எனவே பயண நேரம் விரைவுபடும்.

ஸ்ரீபெரும்புதூர் – ஓ.எம்.ஆர் சாலை இணைப்பு
ஸ்ரீபெரும்புதூர் - ஓ.எம்.ஆர் சாலை இணைப்பு

ஆனால் தனி நபர் வாகனங்கள், புதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே ஸ்ரீபெரும்புதூர் – நாவலூர் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதற்கான வேலைகளில் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது.

இந்த சாலை விரிவாக்கப் பணிகளால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக அலசலாம். ஹூண்டாய், செயிண்ட் கோபைன் போன்ற தொழில் நிறுவனங்களில் இருந்து கனரக வாகனங்கள் சென்னை மாநகருக்குள் நுழையாமல் தென்சென்னை மற்றும் துறைமுகப் பகுதிகளுக்கு எளிதில் சென்றடைய முடியும்.

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே ஒருங்கிணைப்பு
சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே ஒருங்கிணைப்பு

மேற்கு தொழில் மண்டலங்களில் இருந்து தெற்கு ஐடி நிறுவனங்களின் காரிடாருக்கு செல்லும் நேரமானது கிட்டதட்ட 60 சதவீத வரை குறையும். இது எரிபொருள் செலவை மிச்சப்படுத்தி, பணத்தை சேமிக்க வழிவகுக்கிறது. குறிப்பாக சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலை உடன் ஒன்றிணைகிறது.

எனவே பெங்களூருவிற்கு சரக்குகளை கொண்டு செல்ல உதவிகரமாக அமையும். மேலும் பெங்களூருவில் இருந்து வரும் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் விரைந்து துறைமுகப் பகுதிகளுக்கு சென்றடையும். ஒரகடம், சிங்கப்பெருமாள் கோயில் போன்ற பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரகடம் அருகே சாட்டிலைட் டவுன்கள்
ஒரகடம் அருகே சாட்டிலைட் டவுன்கள்

வருங்காலத்தில் சாட்டிலைட் டவுன்கள் உருவாக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கிருந்து வேலைக்காக செல்வோர் ஸ்ரீபெரும்புதூர் – நாவலூர் நெடுஞ்சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். அருகிலுள்ள நகரப் பகுதிகள் உடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையிலான 6 வழிச் சாலையாக விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் 100 கிலோமீட்டர் வேகத்திற்கும் மேல் வாகனங்கள் பயணிக்க முடியும். தேவையான இடங்களில் கீழ்மட்ட சாலைகளையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

வெங்காடு குடியிருப்புவாசிகள் போராட்டம்
வெங்காடு குடியிருப்புவாசிகள் போராட்டம்

ஏற்கனவே இருக்கும் பிளாக் ஸ்பாட்கள் பிரச்சினை வருங்காலத்தில் இருக்காது. ஸ்ரீபெரும்புதூர் – நாவலூர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளால் மூன்று விதமான சிக்கல்கள் எழுகின்றன. (சிக்கல் 1) ஏராளமான தனியார் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட வெங்காடு அருகில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களை காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் நிலையில், தாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருவதாக கூறுகின்றனர்.

சூழலியல் ரீதியிலான சிக்கல்கள்
சூழலியல் ரீதியிலான சிக்கல்கள்

உரிய மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்த கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்த போராட்டங்களால் திட்டம் தாமதமாகும் பட்சத்தில், செலவுகள் அதிகரிக்கும். (சிக்கல் 2) அடுத்து சூழலியல் ரீதியிலான கிளியரன்ஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடர்ந்த வனப் பகுதிக்குள் சாலை செல்வதால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் திட்டத்தை செயல்படுத்துவது சவாலாக பார்க்கப்படுகிறது.

(சிக்கல் 3) கடைசியாக நாவலூர், ஸ்ரீபெரும்புதூர் நுழைவு பகுதிகளில் காணப்படும் குறுகலான சாலைகளால் நிலவும் போக்குவரத்து நெரிசல். இடைப்பட்ட சாலையை 6 வழியாக மாற்றிவிட்டால், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் இருக்கும் நெருக்கடியை சரிசெய்ய வேண்டும்.