2026 சட்டமன்ற தேர்தல்: மார்ச் 31ல் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பரப்புரை- முழு விவரம் இதோ! – cm stalin is scheduled to launch his election campaign in tiruvarur on march 31

மார்ச் 31இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

mk stalin election campaign(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தன்னுடைய தேர்தல் பரப்புரையை திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் ஒருப்போது பாகவை காலூன்ற விடக்கூடாது என்ற முனைப்புடன் திமுக இருந்து வருகிறது.அதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் 200க்கு 200 தொகுதிகளை வெல்ல வேண்டுமென்று திமுக இலக்குடன் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு திமுக சுமார் 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மெகா கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணி 234 தொகுதிகள் தொகுதி பங்கீடு விவரம்

தற்போது தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டது. அதன்படி தொகுதி விநியோகம் பின்வருமாறு உள்ளது: திமுக – 164, காங்கிரஸ் – 28, தேமுதிக – 10 தொகுதிகளும், விசிக – 8 தொகுதிகளும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 5 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் – 5 தொகுதிகளும், மதிமுக – 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2, மனிதநேய மக்கள் கட்சி – 2 தொகுதிகளும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2 தொகுதிகளும், மனிதநேய ஜனநாயக கட்சி – 1தொகுதியும் தொகுதியும் எஸ்டிபிஐ – 1 தொகுதியும்முக்குலத்தோர் புலிப்படை – 1தொகுதியும், தமிழர் தேசம் கட்சி – 1தொகுதியும்மொத்தமாக 234 தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

திமுக 164 தொகுதிகளில் போட்டி

இதில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பான இறுதி விவரங்கள் இன்று முடிவடைந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிச் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 2 ஆம் தேதி பரப்புரை

அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி பரப்புரையை தொடங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட 7 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் ஏப்ரல் 21 ஆம் தேதி பரப்புரையை மு.க.ஸ்டாலின் நிறைவு செய்ய உள்ளார். இதற்கு இடையில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுகான மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.