திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திசையன்விளை, நாலந்துலா பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
இதனையடுத்து அவர், நீதிமன்ற விசாரணைக்கு 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், கருப்பசாமிக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கருப்பசாமியை தாழையூத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
