இரட்டை கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

சஹாரன்பூர்,

உத்தரபிரதேச மாநிலத்தில் நிலத் தகராறில் இரண்டு சகோதரர்களை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சஹாரன்பூர் உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு மொத்தமாக ரூ.10.73 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, சுமார் 20 பீகா (தோராயமாக 12.5 முதல் 20 ஏக்கர்) நிலத்தைச் சுற்றிய தகராறு காரணமாக யாசின் மற்றும் அவரது சகோதரர் தாசின் என்பவர்கள் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Also Read
ஆந்திரா: கலப்பட பால் குடித்ததில் 4 பேர் பலி; முதல்-மந்திரி இழப்பீடு அறிவிப்பு
இரட்டை கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, 13 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Source link