கோவை, திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் – சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

Also Read
ஆக்சன் படங்களில் நடிக்க ஆசை – நடிகை சிவாத்மிகா ராஜசேகர்
கோப்புப்படம்

திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06081), கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மதியம் 2.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

Also Read
கடன் தொல்லையால் வளர்க்க முடியவில்லை… 3 குழந்தைகளை ஏரியில் தள்ளி கொலை செய்த தந்தை – அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 16, 23 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில் (06082), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது
கோப்புப்படம்

Source link