திமுக வேட்பாளர் தேர்வு தொடக்கம்: கனிமொழி போட்டி உறுதியா? வெளியாக புதிய தகவல்! – dmk mp kanimozhi will be a candidate in the upcoming assembly elections

Authored byVidhya|Samayam Tamil

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி வேட்பாளராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனிமொழி(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் தயாரிப்பு மற்றும் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று முதல் நேர்காணல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் தீவிர களப்பணிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் திமுக எம்பியான கனிமொழி தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு மாற உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் விருப்பமனு அளித்த போது எம்.பி கனிமொழி ஆதரவாளர்கள் அவரது பெயரில் அதிக அளவில் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். திமுக அரசியலில் கனிமொழி தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து தேசிய அரசியலில் முன்னிறுத்தப்பட்டார். குறிப்பாக சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் திமுக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆

இந்த சூழலில் தற்பொழுது மாநில அரசியலுக்கு திரும்ப கனிமொழி ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஒருவேளை வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் எந்த தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து சற்று அலசி ஆராயலாம். சட்டமன்றத் தேர்தலில் அவர் நான்கு மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதில் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளனர். திருவாரூர் என்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊராகும். மேலும் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி அதே தொகுதியில் எம். எல். ஏ வாக இருந்தார். இதனால் கனிமொழி போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
இதனை தவிர்த்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக தென் மாவட்டங்களில் உட்கட்சி மோதல் அதிகமாக இருப்பதால் அவற்றை சரி செய்து வெற்றி பெற செய்வது தான் திமுக எம்.பி. கனிமொழியின் பணியாக உள்ளது. இப்பொழுது தூத்துக்குடி எம்.பியாக கனிமொழிக்கு திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் வருகிறது. தூத்துக்குடியை பொறுத்தவரையில் கனிமொழிக்கு களப்பணி மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில் மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு.
கனிமொழி தற்போது தூத்துக்குடி எம்.பி.யாக உள்ளதால், அந்த மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கீதா ஜீவன் தூத்துக்குடி தொகுதியில் எம்பியாகவும் அமைச்சராகவும் உள்ளார், அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் எம்பியாகவும் அமைச்சராகவும் உள்ளார். இருவரும் தங்களுடைய தொகுதியில் பலமாக உள்ளதால், கனிமொழி அவர்களின் தொகுதிகளில் போட்டியிடுவாரா என்பது சந்தேகத்துடன் உள்ளது.
அதே நேரத்தில், ஸ்டாலினின் அனுமதி இல்லாமல் கனிமொழி மாநில அரசியலில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருப்பதால், கனிமொழி இடமாற்றம் அவருக்கு சிக்கலை உருவாக்கக்கூடும். இதனால், கனிமொழி தனது மாநில அரசியல் ஆசையை நிறைவேற்ற ஸ்டாலின் அனுமதியளிப்பாரா என்பது எதிர்காலம் பதில் சொல்லும்.