பேருந்தில் பாலியல் துன்புறுத்தல்..? இளம்பெண் வெளியிட்ட வீடியோ-விபரீத முடிவு எடுத்த நபர்! – kozhikode harassment allegations young woman video released 40 years man death

நெரிசலான பேருந்தில் பயணம் செய்யும் போது, அந்த நபர் பாலியல் நோக்கத்துடன் தன்னைத் தொட்டதாகக் குற்றம் சாட்டி ஒரு பெண் ஒரு வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.,

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்

சமூக வலைத்தளம், இணையம் எப்போதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால், பலர் தங்களது சந்தோஷங்கள், கவலைகள், வேதனைகள் உள்ளிட்ட அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக சில சம்பவங்கள் மிக விரைவாக பரவி, எல்லாம் எல்லாருக்கும் தெரியும் நிலையில் மாறிவிடுகிறது. சமீபத்தில், ஒரு டெலிவரி பார்ட்னர் தனது ஆர்டரை எலி பிஸ்ட் செய்த நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம், சமூக வலைத்தளம் நன்மைக்கும் தீங்குக்கும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை, கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது , 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்,தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுனர்.

இளம்பெண் வெளியிட்ட வீடியோ

இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு காவல்துறையினர் வீடியோவில் உள்ள நபர் கோழிக்கோட்டில் உள்ள கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார். பின்னர் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு விசாரணைக்காக சென்றனர். அப்போது அவரின் வீட்டை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து , உடலை பிரேதப்பரிசோதனைக்காகன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பையனூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பயணத்தின் போது பாலியல் நோக்கத்துடன் தன்னைத் தொட்டதாகக் கூறி ஒரு பெண் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ, வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் கடந்தது.

விபரீத முடிவு எடுத்த நபர் – போலீஸ் விசாரணை

வீடியோ வைரலான பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றச்சாட்டுகளால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த நபர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார், மேலும் அடிக்கடி வேலைக்காக பயணம் செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அவர் நல்ல நபர் . அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணையை ஆராய்ந்தபின்னர் வீடியோவை வெளியிட்ட பெண் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து|ள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link