தகராறில் தலையில் அடித்த கணவன்.. மனைவி பலி –திருப்பூரில் நடந்த கொடூரம்! – young woman was brutally murdered after being struck on the head near tiruppur

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மொண்டிக்காட்டு தோட்டப் பகுதியில் பூங்கொடி என்ற இளம்பெண் மர்மமாக சடலமாக கிடந்ததாக குண்டடம் காவல்துறைக்கு தகவல் வந்தது. உடனே தாராபுரம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

திருப்பூர் இளம்பெண் கொலை

அங்கு இளம்பெண் பூங்கொடியின் உடலில் ஆழமான வெட்டு காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தினர். இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, சிறப்பு தனிப்படையை அமைத்து “பூங்கொடியின் மரணத்திற்கு காரணம் யார்? சம்பவம் தோட்டப்பகுதியில் எப்படி நடந்தது?” என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேலும் வேகப்படுத்தினர்.

மொண்டிக்காட்டு தோட்டம் சம்பவம்

தொடர்ந்து காவல்துறையினர் நடத்தப்பட்ட விசாரணையில் கொக்கம்பாளையத்தைச் சேர்ந்த அங்கமுத்துவின் மனைவி பூங்கொடி என்பது தெரியவந்தது. இவர்களுக்கு பெமினேஷன், நித்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 16 வயதிலேயே குடும்பத்தினரை மீறி அங்கமுத்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் பூங்கொடி என்பது விசாரணையில் தெரியவந்தது.

சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த தம்பதியர், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கருத்து வேறுபாட்டால் பிரச்சினைகளை சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமையல் வேலை செய்து வரும் அங்கமுத்து அடிக்கடி மது அருந்தி வீட்டிற்கு வந்து, மனைவி பூங்கொடியை தாக்கி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கணவன் மனைவி தகராறு கொலை

இந்த சூழலில் தான் , மொண்டிக்காட்டு தோட்டப்பகுதியில் கை, கால், முகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆழமான வெட்டு காயங்களுடன், முகம் சிதைந்த நிலையில் பூங்கொடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் பூங்கொடியின் கணவர் அங்கமுத்துவை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார். மேலும் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் மூலம் பூங்கொடியின் மரணத்துக்கான உண்மையான காரணமும் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் போலீஸ் விசாரணை

விசாரணையின் போது, குடும்ப தகராறில் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக மனைவி கொலை செய்ததாக அங்கமுத்து ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் பின்னணியில், “கொலைக்கு நேரடி காரணம் என்ன? இதில் வேறு யாருமே தொடர்புடையவர்களா?” போன்ற கோணங்களில் போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

காவல்துறை பூங்கொடியின் கைபேசி, திருமண பின்னணி, குடும்ப உறவுகள், அண்மைய தொலைபேசி பதிவுகள் போன்றவற்றையும் பரிசோதித்து வருகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இன்னும் முக்கியமான தகவல்கள் வெளிவரும் வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

விசாரணை முடிவில் கூடுதல் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் வாய்ப்பும் உள்ளது. காதலித்து திருமணம் செய்த மனைவியை கணவனே கொலை செய்தது தாராபுரம் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மறுப்புறம் தாயை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source link