இதோடு நிறுத்திக்க வேண்டும்.. ஒட்டுமொத்த பெண்களையும் திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை – premalatha vijayakanth stern warning regarding cv shanmugam controversial speech

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்றைய தினம் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் பேசியது மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவருடைய பேச்சுக்கு எதிராக பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பெண்களை இழிவுபடுத்ததி பேசுவதை இதோடு நிறுத்திக்க வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தேமுதிக. கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக கூட்டணி அமைத்திருந்த நிலையில், கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவுடன் கூட்டணி அமைத்ததே இல்லை. இந்நிலையில் இந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அதன்படி தனது மகன்கள், தொண்டர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பின் செய்தியாளர்களிடம் பேசியவர், அதிமுகவை சார்ந்த சி.வி. சண்முகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளளார். முன்னதாக நேற்றைய தினம் அதிமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிவி சண்முகம் பேசியது சர்ச்சைகளை கிளப்பியது.
சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு
அதாவது, முதலமைச்சரின் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற திட்டத்தை விமர்சிக்கும் விதமாக ‘கனவை சொன்னால் இவர் நிறைவேத்துறாராம். எனக்கு நயன்தாரா வேணும். கனவை நிறைவேத்துவாரா என கொச்சையாக பேசியிருந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒரு பெண் குறித்து சிபி சண்முகம் எவ்வாறு இப்படி பேசலாம் என சர்ச்சைகளை எழுந்தது.
இதனையடுத்து பலரும் அவருடைய பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில், வருத்தம் தெரிவித்தார் சிவி சண்முகம். இந்நிலையில் இந்த விவகாரம் சம்பந்தமாக தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. நான் ஒரு பெண். எனவே நிச்சயமாக யாராக இருந்தாலும், எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசினால் கண்டிக்க உரியவர்கள்.
Samayam Tamilஎன் வாழ்நாளில் திமுகவுக்கு ஓட்டு போட்டதே கிடையாது.. தீயாய் பரவும் வீடியோ.. முதல்வர் வெளியிட்ட பதிவுமிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம்
அதனால் அந்த வார்த்தைகளை, அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். இப்போ அவுங்க கிட்ட அந்த கேள்வியை கேட்டால் ஒப்புகொள்வார்களா. பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதை யாராக இருந்தாலும் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அது நடிகையாக இருந்தாலும் சரி, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி. பெண்களை இழிவுப்படுத்துவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளை ஒன்றாக திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், கண்டனத்தை நான் முன்னெடுப்பேன்.
பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை
இதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. பெண்களை மதிக்கும் ஒரு நாட்டில் இதுபோன்று இழிவுப்படுத்தி பேசி, கைத்தட்டி சிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. யாராக இருந்தாலும் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய பிறந்தநாள் செய்தியாக இதை கூறுகிறேன் என தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
மேலும் அவர் பேசுகையில் முதல் ஆளாக தொலைப்பேசியில் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு தேமுதிக சார்பாக என்னுடைய நன்றியை தற்போது தெரிவித்துக் கொள்கிறேன். வெகு விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சம்பந்தமாக பேசுவோம் எனவும் கூறியுள்ளார். சீக்கிரமாகவே பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு களத்துக்கு செல்வோம் அண்ணே. நேரம் குறைவாக இருக்கு என நான் சொல்லியுள்ளேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.