இந்தியாவின் மிகக் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் (NEET UG) தேர்வில் வெற்றி பெறுவது என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்நாள் கனவு. லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் கார்ப்பரேட் பயிற்சி மையங்களுக்குச் சென்றால் மட்டுமே இதில் வெல்ல முடியும் என்ற பிம்பத்தை, தன் அசாத்திய உழைப்பால் உடைத்தெறிந்துள்ளார் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர்.
அசாம் மாநிலம், கோக்ராஜர் (Kokrajhar) மாவட்டத்தைச் சேர்ந்த பிஜித் ராய் (Bijit Ray) என்ற மாணவர், நடப்பு நீட் 2026 தேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த ஏழை எளிய மாணவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகமாக மாறியுள்ளார்.
இ-ரிக்ஷா ஓட்டுநரின் வீட்டில் உதித்த மருத்துவக் கனவு
பிஜித் ராய் பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் எளிமையானது. இவரது தந்தை கோவிந்தா ராய் (Gobinda Ray) மற்றும் தாய் ஹீரா ராய் (Hira Ray) ஆகியோருக்கு முறையான கல்விப் பின்னணி கிடையாது. தந்தை கோவிந்தா ராய், தன் குடும்பத்தைக் காப்பாற்ற கிராமப்புறச் சாலைகளில் இ-ரிக்ஷா (E-rickshaw) ஓட்டி வருகிறார்.
அதுமட்டுமின்றி, அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்கே பற்றாக்குறையாக இருந்ததால், பகுதி நேரமாக தினக்கூலி வேலை மற்றும் சிறு விவசாயப் பணிகளுக்கும் அவர் சென்று வருகிறார். கடும் பொருளாதார நெருக்கடியும், அன்றாட வாழ்வாதாரப் போராட்டமும் ஒருபுறம் இருந்தாலும், தன் மகனின் மருத்துவக் கனவிற்கு அவர் என்றுமே தடையாக இருந்ததில்லை.
“நீட் தேர்வுன்னா என்னன்னே எங்களுக்குத் தெரியாது!” – நெகிழ்ச்சிப் பின்னணி
இந்தச் சாதனையின் ஆகச்சிறந்த சிறப்பம்சமே, பிஜித் ராயின் பெற்றோருக்கு ‘நீட் தேர்வு’ என்ற வார்த்தையின் அர்த்தம் கூட இதற்கு முன்பு தெரியாது என்பதுதான்.இதுகுறித்து பிஜித் ராயின் தந்தை கோவிந்தா ராய் ஊடகங்களிடம் பேசுகையில்,”எனக்கு படிப்பறிவு கிடையாது. என் மகன் பெரிய டாக்டர் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று சொன்னான், அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவன் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவனது படிப்புச் செலவிற்காக நாங்கள் பட்டினியாகக் கிடக்கவும் தயாராக இருந்தோம்” என்று கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.பெற்றோரின் தியாகத்தையும், அவர்களின் அறியாமையையும் உணர்ந்த பிஜித் ராய், அஜ்மல் அறக்கட்டளையின் (Ajmal Foundation) முறையான வழிகாட்டுதலின்படி, தனது முதல் முயற்சியிலேயே (First Attempt) தீவிரமாகப் படித்து இந்த இமாலய இலக்கை எட்டியுள்ளார்
சமூக ஊடகங்களில் வைரலாகும் பிஜித் ராய்பிஜித் ராயின் இந்த அசாத்திய சாதனை, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் உள்ள பல ஏழை எளிய மாணவர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது
