நீட் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்த நிலையில் கடந்த மே 3 ஆம் தேதி அன்று நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அதற்கான மறுத்தேர்வு ஜூன் 21 ம் தேதி தேசிய தேர்வு முகமையால் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி
இந்த நிலையில், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு அப்பாவி மாணவர்கள் பாதிக்கபடுவதாக கூறி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று தன்னுடைய பதவி ராஜனாமா செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராத்தில் ஈடுப்பட ஆரம்பித்தார். இதனையடுத்து சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டம் 15 நாட்களை கடந்ததால், உணவு, தண்ணீர் இல்லாமல் அவரது உடல் மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காப்பற்றக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுநல வழக்கு தொடரப்பட்டது.
திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி
சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாங்சுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்டு இருந்த சோனம் வாங்சுக்கின் உடலை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது. குறிப்பாக 9 கிலோவுக்கு அதிகமான எடையை இழந்துள்ளார்.சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தால் உயிரிழக்க நேரிடலாம் என்று மருத்துவர்கள் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டனர்.
வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி
இந்த அறிவிப்பு பிறகு நேற்று மத்திய அரசின் உத்தரவின்படி, உண்ணாவிரத்தில் இருந்த சோனம் வாங்சுக்கை மருத்துவர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், சோனம் வாங்சுக்கை எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து விடுவித்து, அவரது விருப்பப்படி ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி கீதாஞ்சலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒருவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு அரசு எடுத்த இந்த முடிவு சட்டப்படி சரியானதுதான் என்று குறிப்பிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தற்சமயம் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சோனம் வாங்சுக்கின் தாக்கல் செய்த மனுவை வரும் 24 ஆம் தேதி ஒத்திவைத்து உள்ளது. இதனால் சோனம் வாங்சுக் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
