மார்க்கண்டேயன் கைது விவகாரம்: தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா – ‘There Will Be Consequences’ ஸ்டாலின் கடும் எச்சரிக்கை – markandeyan arrest row rule of law or rule of fear stalin warns there will be consequences

சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்றும் சட்டமன்றத்தின் கதவுகளை அடைப்போம் என விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்..

மார்க்கண்டேயன் கைது விவகாரத்திற்குகனிமொழி,அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனங்களை பதிவு செய்திருந்த நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் தவெக -திமுக இடையேயான அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், இது ஜனநாயக விரோத நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஜனநாயகப் பண்புகள் இல்லை” முன்னாள் முதல்வரின் குற்றச்சாட்டு

இது தொடர்பாக அவர் தனது பதிவில், தற்போதைய அரசு ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அவதூறு வழக்குகளில் தொடர்பில்லாத சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படுவதாக நீதிமன்றமே முன்பு கேள்வி எழுப்பியிருந்ததை சுட்டிக்காட்டியும் அவர் விமர்சனம் முன்வைத்துள்ளார்.

கைது நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனுக்கு அவரது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அவருக்குத் தேவையான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இது கைது செய்யப்பட்ட ஒருவரின் அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கலா?

அரசியல் விமர்சனங்களுக்கு மட்டுமே அரசு தீவிரமாக செயல்படுகிறது என்றும், பிற முக்கிய குற்றச்சாட்டுகளில் அதே அளவிலான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். தனது பதிவின் இறுதியில், சட்டத்திற்கு உட்பட்டும் மனசாட்சிப்படியும் செயல்படுமாறு காவல்துறையினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியுமா? சரமாரி கேள்வி கேட்ட TVK MLA

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

மார்க்கண்டேயன் கைது விவகாரம் அரசியல் ரீதியாக மேலும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசு அல்லது காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகிறதா என்பதும், கைது தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணையும் அரசியல் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

கனிமொழி கண்டனம்

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாககனிமொழிவெளியிட்டுள்ள அறிக்கையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசை விமர்சிப்பவர்களை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள முடியாமல், காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், திமுகவினரை அச்சுறுத்தும் நோக்கில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ள அக்கட்சி, ஜனநாயக வழியில் இதற்கு தக்க பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இறுதியாக, கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

Source link