7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு…   ஏப்ரல் 19 இல் முதற்கட்டத் தேர்தல்…

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறித்துள்ளார். அதன்படி ஏப்ரல் 19 இல் முதற்கட்டத் தேர்தல் தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு நடைபெறுகிறது.

மக்களைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் தலைமத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என அறித்தனர். அதன்படி. 

ஏப்ரல் 19 – முதற்கட்டத் தேர்தல் 
ஏப்ரல் 26 – 2 ஆம் கட்டத் தேர்தல்
மே 7 – 3 ஆம் கட்டத் தேர்தல்
மே 13 – 4 ஆம் கட்டத் தேர்தல்
மே 20 – 5 ஆம் கட்டத் தேர்தல்
மே 25 – 6 ஆம் கட்டத் தேர்தல்
ஜுன் 1 – 7 ஆம் கட்டத் தேர்தல்

ஜுன் 4 வாக்கு எண்ணிக்கை.

Source link