திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விஷேச தினங்களில் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 70 ஆயிரத்து 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 21 ஆயிரத்து 738 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள். அன்று ஒருநாள் உண்டியல் காணிக் கையாக ரூ.4 கோடியே 88 லட்சம் கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.
