உங்க போலீஸ் ஸ்டேஷன் கிடையாது.. மருத்துவமனையில் போலீசாருடன் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் வாக்குவாதம்: என்ன நடந்தது? – dmk anitha radhakrishnan engaged in an argument with the police in hospital

விளாத்திக்குளம் திமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பத்து மணி நேர விசாரணைக்கு பின்பாக அவர் மருத்துவமனை அழைத்து வரப்பட்ட நிலையில், மார்க்கண்டேயனை சந்திப்பதற்காக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு வருகை தந்து இருந்தார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பார்ப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட மார்க்கண்டேயனை சந்திப்பதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் வக்கீலுடன் வருகை தந்திருந்தார்.

அப்போதும் அவரை காவல்துறையினர் சந்திப்பதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து வக்கீலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி ADSP, எங்களை பொறுத்த வரைக்கும் அவர் அக்யூஸ்ட். கோர்ட்டுக்கு வாங்க. அட்வகேட்டுக்கு இங்கே இடம் கொடுக்க முடியாது என்றார். அப்போது இது ஆஸ்பத்திரி. உங்களுடைய போலீஸ் ஸ்டேஷன் கிடையாது என்று ஆவேசமாக கூறினார்ர் அனிதா ராதாகிருஷ்ணன். அதற்கு ADSP உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என மிரட்ட ஆரம்பிக்க, வக்கீலும் எடுங்க சார் என்றார்.

காலையில் இருந்து வெயித்ட் பண்றோம். அரெஸ்ட் பண்ண வரும்போது பத்து விஷயங்களை பாலோ பண்ணனும் தெரியும்ல. அதை நீங்க பாலோ பண்ணீங்களா. அவரோ கவுன்சல் நான் என அடுக்கடுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் உடன் வந்த வக்கீல் கேள்விகளை எழுப்பினார். அதோடு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகனான வக்கீலும் போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி திபு, செய்தியாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசியதாக வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதாவது மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களிடம், மிரட்டுவதை போன்று அவர் பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த வீடியோவும் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

மேலும் முன்னதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்கும் விதமாக, அவரை பின்வாசல் வழியாக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது பத்திரிக்கையாளர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக கூச்சலிட்டார். தன்னை மார்ச்சுவரியில் கொண்டு சென்று அடைக்க போவதாகவும் புகார்களை அவர் தெரிவித்ததும் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

மேலும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பாக செய்தியாளர்களிடம், நேரடியாக எஸ்பி, ஏடிஎஸ்பி யாருக்கும் அதிகாரம் இல்லைன்னு நினைக்கிறேன். அவுங்களோட கடமையை அவர்களால் செய்ய முடியவில்லை. எங்கையோ உத்தரவுக்காக காத்து இருக்காங்க. அந்த திறன் அவர்களுக்கு கிடையாது என காவல்துறை மீது குற்றச்சாட்டினை முன்வைத்து மார்க்கண்டேயன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link