விஜய் போட்டி: தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டபோது வெற்றி பெற மாட்டார் என்றே பலரும் நினைத்தார்கள். இதில் அவர் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தபோது கண்டிப்பாக தோல்வி தான் என மக்கள் பேசினார்கள். மேலும் தவெகவினருக்கு அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என பேசப்பட்டது.
அப்படி இருக்கும்போது விஜய் தான் அடுத்த முதல்வர் என தவெகவினர் கூறியதை கேட்டு மக்கள் கிண்டல் செய்தார்கள், சிரித்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக அமோக வெற்றி பெற்று முதல்வராகிவிட்டார் உங்கள் விஜய். அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லா வலியையும் தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன், எல்லா வலியையும் தாங்கிட்டு இருக்கிறேன் என மீண்டும் மீண்டும் கூறியது அவர் ரசிகர்கள், ரசிகைகள் மனதில் ஆழமாக பதிந்து அது வாக்காக மாறியதாக நம்பப்படுகிறது.
வினோத் விளக்கம்: இந்நிலையில் விஜய் சார் ஜெயிப்பார் என நானே நினைக்கவில்லை என ஜனநாயகன் படத்தை இயக்கிய ஹெச். வினோத் தெரிவித்தது யாருக்கும் அதிர்ச்சியாகவோ, ஆச்சரியமாகவோ இல்லை. மக்கள் நினைத்தது மாதிரி தான் அவரும் நினைத்திருக்கிறார் என்றே பேசப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வினோத்.
விஜய் சார் வெற்றி பெறுவார்னு நான் நினைக்கவில்லை என ஏன் சொன்னீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு வினோத்தோ, சாருக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டது. அப்படி இருக்கும்போது மக்கள் விஜய் சாரை நம்புவார்களா இல்லையா என்கிற பயம் இருந்தது. அந்த சமயத்தில் டிவியில் பேசியவர்கள் பூத் பாலிடிக்ஸ் ஒன்று இருக்கிறது, ஓட்டு பணம் கொடுப்பாங்க. இந்த பவரை எல்லாம் எப்படி எதிர்கொள்ள முடியும் என்கிற பயம் இருந்தது. அதை எல்லாம் மக்கள் உடைத்துவிட்டார்கள். அதை நான் கணிக்கவில்லை. அதிலும் குறிப்பாக மக்கள் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாமல் போனதை பெரிய சர்பிரைஸ் ஃபேக்டராக பார்க்கிறேன் என்றார்.
இது பகவந்த் கேசரியின் ரீமேக் என்பதை வினோத்தே தெரிவித்துவிட்டார். அப்படி இருக்கும் இது விஜய் சார் படமா இல்லையா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அந்த சந்தேகமே வேண்டாம் என்கிறார் வினோத். இது 200 சதவீதம் விஜய் சார் படம். இரண்டரை மணிநேரம் அவரை கொண்டாடுங்கள். கடைசி 30 நிமிடம் அமைதியாக கவனமாக படம் பார்த்தால் அது நம் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றார்.
பொய்கள், மாற்றம்: பேட்டிகளில் வினோத் பேசி வரும் விஷயங்கள் மக்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பொய் சொல்லி ஒருத்தன் ஜெயிக்கிறான், ஆப்போசிட் ஆளால உண்மை சொல்லி வெற்றி பெற முடியல, சமூகத்தில் நிறைய பொய் இருக்கிறது, நிறைய ஐடி விங்ஸ் வந்துவிட்டது என அவர் பேசியது விவாதப் பொருளாக ஆகியிருக்கிறது.
இந்நிலையில் மாற்றம் குறித்து வினோத் தெரிவித்து நூற்றுக்கு நூறு சரி என மக்கள் தெரிவித்துள்ளனர். மாற்றம் என்பது டகால்னு வருவது வந்த அதே வேகத்தில் போய்விடும். ரொம்ப நாள் நீடிக்காது. ஒரு குறிக்கோளை அடைய ட்ரையல் அன்ட் எரர் செய்து கொண்டே இருக்கணும் என்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இதற்கிடையே ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்று கிடைத்திருப்பதால் நாளை குட்டீஸ்கள் யாரையும் தியேட்டரில் அனுமதிக்க மாட்டார்கள். அவர்களால் தன் படத்தை பார்க்க முடியாமல் போனது முதல்வர் விஜய்க்கு வருத்தமாக இருக்கிறதாம்.
Source link
