நீட் ஒழிப்புதான் தவெக நிலைப்பாடு: ஆனாலும் ரோட்டுல போராட்டம் பண்ண வேண்டாம் – அமைச்சர் ராஜ்மோகன் – tvk supports neet abolition but protests should not be held on roads says minister rajmohan

நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமெனில் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் ஒரே நிரந்தர தீர்வு என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர்களின் அறவழி போராட்டங்களுக்கு தமிழக அரசின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘நீர் எழில் பள்ளி’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் ‘நீர் எழில் பள்ளி’ (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர்காலம்) திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை மீண்டும் விளக்கினார்.

‘நீட் எதிர்ப்பில் டபுள் ஸ்ட்ராங்’

நீட் தேர்வை எதிர்ப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியானது என்றும், “நீட் எதிர்ப்பில் நாங்கள் Double Strong-ஆக இருக்கிறோம்” என்றும் அமைச்சர்ராஜ்மோகன் கூறினார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாமல் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், “நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், நீட்டை ஒழிக்க வேண்டுமெனில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்றார்.

மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் அறவழி போராட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் கோரிக்கையை அமைதியான முறையில் வெளிப்படுத்துவது ஜனநாயக உரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறவழி போராட்டமே ஜனநாயக வழி’

டெல்லியில் நடைபெறவுள்ள நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தவறானது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “சாலை என்பது போராட்டம் நடத்தக்கூடிய இடம் அல்ல. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மற்ற இடங்களில் அறவழியில் போராட்டங்களை நடத்தலாம்” என்று அவர் கூறினார்.

அதேநேரம், அறவழி போராட்டம் என்பது பொது சொத்துகளை சேதப்படுத்துவதோ, வன்முறையில் ஈடுபடுவதோ அல்ல என்றும், உண்ணாவிரதம், அமர்ந்து போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட அமைதியான ஜனநாயக வழிமுறைகளே உண்மையான அறவழி போராட்டங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்களின் அமைதியான போராட்டங்களுக்கு தமிழக அரசின் ஆதரவு தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு குரல்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும், சமூக நீதி பாதிக்கப்படக் கூடாது, கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளே இந்த போராட்டங்களின் மையக் கருத்தாக உள்ளன.

அரசியல் அனாதை ஆனதா திமுக?அதிரடியாக மாறிய TVK பக்காவாக அரசியல் செய்யும் Vijay

தமிழ்நாட்டில் நீட் விலக்கு கோரிக்கை நீண்டகாலமாக அரசியல்மற்றும் சட்டரீதியான விவாதமாக இருந்து வரும் நிலையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

Source link