இந்தியாவில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் (FCRA) 2026-ஆம் ஆண்டு புதிய திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டமான (FCRA) திருத்த மசோதா 2026, நாட்டின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் வளர்ச்சி முன்னுரிமைகளை பாதுகாக்க அவசியமானதாக ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். சமீப ஆண்டுகளில் வெளிநாட்டு நிதிகள் இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களை தடுக்கவும், தீவிரவாத தொடர்பான செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும், பலவீனமான சமூகங்களை குறிவைத்து மதமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
FCRA திருத்த மசோதா 2026
2019 முதல் 2022 வரை 13,500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் 55,741 கோடி வெளிநாட்டு நிதி பெற்றுள்ள நிலையில், இந்த நிதிகள் வெளிப்படையாகவும் சட்டப்படி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதே மசோதாவின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது. புதிய திருத்தத்தின் கீழ், ஒரு அமைப்பின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டாலோ, காலாவதியானாலோ அல்லது ஒப்புக்கொடுக்கப்பட்டாலோ, அந்த அமைப்பின் வெளிநாட்டு நிதியால் உருவான சொத்துகளை இடைக்காலமாக அரசின் கீழ் கொண்டு வர ஒரு தனி அதிகார அமைப்பு உருவாக்கப்படுகிறது.
Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!
இதனால் முன்பு இருந்த ‘காலாவதியான பின்பும் சொத்துகளை வைத்துக்கொள்வது’ என்ற குறைபாடு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு நிதி பயன்பாட்டுக்கு அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக பொறுப்பு ஏற்க வேண்டிய கட்டுப்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா மதமாற்ற நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிதியை பயன்படுத்த தடை விதிக்கிறது, ஆனால் மத கல்வி, பிரசங்கம், ஆன்மிக முகாம்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை பாதுகாக்கும் செயல்பாடுகளுக்கு அனுமதி தொடரும் என விளக்கப்படுகிறது.
வெளிநாட்டு நிதி கண்காணிப்பு
அதே நேரத்தில், இந்த சட்டத்தின் கீழ் வாங்கப்படும் வழிபாட்டு தலங்களின் மத தன்மையை பாதுகாப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை மதிப்பீடுகள் படி, கம்யூனிஸ்ட்/இடதுசாரி, இஸ்லாமிய தீவிரவாத மற்றும் மிஷனரி வலையமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறும் NGO அமைப்புகளின் மூலம் செயல்படுகின்றன என்றும், இவை வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும் வகையில் செயல்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. சில அமைப்புகள் சுற்றுச்சூழல் போராட்டங்களை பயன்படுத்தி முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் திட்டங்களை தடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனைத் தடுக்க இந்த திருத்தம் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது என ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
FCRA திருத்த மசோதா 2026 ஏன் அவசியம்?
Greenpeace India, Amnesty International India, Lawyers Collective போன்ற அமைப்புகளின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், வெளிநாட்டு நிதி தவறாக பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகளாக கூறப்படுகின்றன. குறிப்பாக Amnesty India மீது FDI மற்றும் ‘consultancy fees’ வழியாக ₹36 கோடி நிதி சுழற்சி செய்யப்பட்டதாகவும், PFI போன்ற அமைப்புகள் வெளிநாட்டு நிதியை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட சில அமைப்புகளின் FCRA பதிவு இடைநீக்கம் செய்யப்பட்டதும், இந்த சட்டம் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மசோதாவுக்கு எதிராக சில NGOகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த திருத்தம் வெளிநாட்டு நிதி பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கை என ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தியா போன்ற ஒரு சுயாட்சி நாடு, வெளிநாட்டு செல்வாக்கை கட்டுப்படுத்தி தனது வளர்ச்சி மற்றும் சமூக நிலைத்தன்மையை பாதுகாக்கும் உரிமை கொண்டது என்ற அடிப்படையில் இந்த மசோதா அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
