Tamilisai Soundararajan About Edappadi Palanisamy,டெல்லிக்கு போனாலே பிரச்சனையா ? எடப்பாடி பழனிச்சாமி -அமித் ஷா சந்திப்பு குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் – tamilisai soundararajan about edapaddi palanisamy delhi visit

பாஜகவின் தசை சௌந்தரராஜன் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு பயணம் செய்தது குறித்து தன் கருத்தை கூறியிருக்கின்றார். மேலும் தவெக தலைவர் விஜய்யின் கருத்து குறித்தும் பதிலளித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்

முக்கிய அம்சங்கள்:

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

tamilisai soundararajan about eps
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென டெல்லிக்கு பயணம் செய்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றிருக்கின்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது துவங்கும் என்பது குறித்து கேள்விகள் அதிகரித்து வருகின்றன. விரைவில் பேச்சுவார்த்தையை துவங்குவோம், எங்களுக்குள் சுமுகமான முடிவு தான் எடுக்கப்படும்.நாங்கள் கூட்டணியாக மட்டுமல்லாமல் ஒரு குடும்பமாக இருக்கின்றோம் என தேசிய ஜனநாயக கூட்டணி காட்சிகள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லிக்கு அமித் ஷாவை சந்திக்க சென்றிருக்கின்றார். திடீரென எடப்பாடி பழனிச்சாமி எதற்காக அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் என பரபரப்பாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லிக்கு சென்றிருப்பதால் தொகுதிப்பங்கீட்டில் ஏதேனும் பிரச்சனையா ? கூட்டணியில் குழப்பமா ? அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்திக்க டெல்லிக்கு சென்றாரா ? என பல கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.
அவர் பேசியது, ஏதாவது குழப்பம் இருந்தால் தான் டெல்லிக்கு போகணுமா ? சாதாரணமாக டெல்லிக்கு பயணம் செய்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு தான். ஒரு கூட்டணி கட்சி தலைவர் இன்னொரு கூட்டணி கட்சி தலைவர் டெல்லிக்கு செல்கின்றார். இதில் என்ன குழப்பம் உள்ளது. இதை குழப்பம் என சொன்னால் அப்போ திமுக கூட்டணியில் நடப்பதற்கு பெயர் என்ன ? ஆறு தொகுதிகளை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து ஐந்து தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் காட்சிகள் வருத்தம் தெரிவித்தனர். ஆனால் எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். திமுகதோழமை கட்சிகளை அடிமைசெய்கின்றனர், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்கவேண்டும் என அவர்கள் வற்புறுத்துகின்றனர். மற்ற தோழமை கட்சிகளின் தொகுதிகள் பறிக்கப்படுகின்றன. அப்போ கனிமொழி ஏன் ராகுல் காந்தியை சந்தித்தார்கள் ? அப்போ அவர்களுக்குள் குழப்பம் இருக்கின்றதா ? ஒரு மாநில கட்சியை சேர்ந்தவர்கள் தேசிய கட்சி தலைவரை பார்க்க செல்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு அமித் ஷா தமிழகத்திற்கு வந்தார்கள். பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு பயணம் செய்தார்கள். அதைப்போல தான் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றிருக்கின்றார். நிர்வாக ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் பயணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவலாக சொல்லப்பட்டது. இதுகுறித்து கடந்த ஒரு சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தவெக தலைவர் விஜய் மதவாத கட்சிகளுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என கூறிவிட்டார். இதுகுறித்து தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கருத்து கேட்கப்பட்டதற்கு ,எந்த மதவாத கட்சி ? நாங்கள் மதவாத கட்சி கிடையாது.
நாங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். ஒருவேளை திமுகவை தான் அவர் மதவாத கட்சி என சொல்கிறாரா ? திமுக தான் ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கின்றனர். நாங்கள் அனைவரையும் சமமாக தான் பார்க்கின்றோம் என்றார் தமிழிசை சௌந்தரராஜன். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்தவர்களும் பாஜகவை சேர்ந்தவர்களும் தங்கள் தவெக தலைவர் விஜய்யுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என உறுதியாக சொல்கின்றனர்.

Exclusive: கோபப்பட்ட அண்ணாமலை: டெல்லியில் நடந்தது என்ன?

மறுபக்கம் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, எங்களுக்கு பிற கட்சிகளிடம் இருந்து ஆபர் வந்ததாக பேசினார். இதுகுறித்து நைனார் நாகேந்திரன் பேசுகையில், ஆதவ் அர்ஜுனா தனக்கு யார் என்றே தெரியாது என்பது போல பதிலளித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பலரும் தவெகவுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடந்ததே இல்லை என்றே சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஆக மொத்தத்தில் பேச்சுவார்த்தை நடந்ததா ? இல்லையா ? என்பது ஒருபக்கம் இருந்தாலும் தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாது என்பது மட்டும் உறுதியாகியிருக்கின்றது.