சென்னை உள்நாட்டு விமான நிலைய பயணிகள் வருகை பகுதியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் மர்ம பொருட்கள் அல்லது வெடிபொருட்கள் இருக்கும் அச்சத்தில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பாக காணப்படும் சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு என எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று (மார்ச் 19 ஆம் தேதி) மாலை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன் A3 வருகைப் பகுதியில் பயணிகள் எப்போதும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து நயினார் நாகேந்திரன் வருகை
மேலும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், இன்று (மார்ச் 19 ஆம் தேதி) மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து ஏ3 வருகைப் பகுதியில் வெளியே வர இருந்தார். அவரை வரவேற்க அவரது உதவியாளர்கள் வெளியே காத்திருந்தனர்.
கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ்
இந்த நிலையில் அந்த பயணிகள் வெளியேறும் கேட் அருகே சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று வெகு நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதனை கவனித்த சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், இந்த சிவப்பு நிற சூட்கேஸ் யாருடையது? எனக் கேட்டனர். ஆனால் அங்கிருந்த நபர்கள் யாரும் பதில் அளிக்காததால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
மேலும் வெகு நேரமாக அந்த இடத்தில் கேட்பாராற்று அந்த சூட்கேஸ் இருந்ததால், அதில் ஏதாவது மர்ம பொருளோ அல்லது வெடி பொருட்களோ இருக்கும் என அச்சத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கிருந்து பயணிகளை அப்புறப்படுத்தி விட்டு வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அந்த சூட்கேஸை சோதனை மேற்கொண்டனர்.
வெடிபொருட்கள் இல்லை
இதனைக் கண்ட சென்னை விமான நிலைய பயணிகள், அச்சத்தில் அங்கிருந்து தூரமாகச் சென்றனர். இதை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய சோதனையில், அந்த சூட்கேஸில் மர்ம பொருட்களோ வெடிபொருட்களோ இல்லை என்பது தெரிய வந்தது.
அதிகாரிகளால் சூட்கேஸ் பறிமுதல்
இதை அடுத்து சென்னை விமான நிலைய பயணிகள் நிம்மதி அடைந்தனர். பின்னர் யாரும் உரிமை கோராத அந்த சிவப்பு நிற சூட்கேஸை பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கொண்டு சென்றனர்.
குஜராத் விமான விபத்தில் உயிர் தப்பியவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…
சென்னை உள்நாட்டு விமான நிலைய பயணிகள் வருகை பகுதியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் மர்ம பொருட்கள் அல்லது வெடிபொருட்கள் இருக்கும் அச்சத்தில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
