கொங்கு + தெற்கு… அதிமுக போடும் வாக்கு வங்கி கணக்கு- ஈபிஎஸ்க்கு வலு சேர்க்கும் தலைவர்கள் லிஸ்ட்! – after kongu region edappadi palaniswami south caste politics strengthens aiadmk in 2026 assembly polls

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் பிரதான வாக்கு வங்கிக்கு பலம் சேர்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தென் மாவட்டங்களில் சமூக ரீதியாகவும், தனிப்பட்ட செல்வாக்கு அடிப்படையிலும் யார், யார் முக்கியத்துவம் பெறுகின்றனர் என விரிவாக பார்க்கலாம்.

EPS South districts 2026 Poll Strategy(புகைப்படங்கள்Samayam Tamil)
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தமிழகத்தின் மேற்கு மண்டலமும், தெற்கு மண்டலமும் மிகவும் சாதகமான முடிவுகளை அளித்திருக்கிறது. இதை மனதில் வைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வியூகங்களை வகுத்து வருகிறார். மேற்கில் வன்னியர் வாக்குகளும், தெற்கில் முக்குலத்தோர் வாக்குகளும் அதிமுகவின் பலம். இதுதவிர வேறு சில சமூக வாக்குகளும் தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முதலில் முக்குலத்தோர் வாக்குகளை பிரித்து பார்த்தால் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய பிரிவினர் வருகின்றனர்.

தென் மாவட்ட சமூக வாக்கு வங்கி

இதையடுத்து தேவேந்திர குல வேளாளர், நாடார், யாதவர், நாயக்கர், சீர் மரபினர், மீனவர் உள்ளிட்டோர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அதிமுகவில் முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதிகளாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் இருக்கின்றனர். இருப்பினும் தெற்கில் பிரபலமான தலைவர்களாக வலம் வந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

கறார் காட்டிய எடப்பாடி! கப்சிப் ஆன பிஜேபி_

குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக ஏற்படுத்திய தாக்கத்தால் 21 தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது. இதை மனதில் வைத்தே 2026 தேர்தலில் டிடிவி தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தாண்டி எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் டிடிவி தினகரன் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகிறது. மற்ற சமூகங்களும் இருக்கின்றன. அவற்றில் செல்வாக்கு பெற்ற தலைவர்களை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் தான் வெற்றியை நோக்கி வீறுநடை போட முடியும்.

அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் தலைவர்கள்

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக பெரிய பிளஸ்ஸாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நயினார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமூகத்தின் பிரபல தலைவராக பார்க்கப்படுகிறார். மேலும் பொருளாதார ரீதியாகவும், பரவலாகவும் வசித்து வரும் நாடார் சமூகத்தினரின் தேர்தல் பங்களிப்பு முக்கியமானது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமாக இருப்பதால் தேர்தல் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றனர். பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களை சொல்லலாம்.
இவர்கள் பிரச்சார களத்தில் முக்கிய முகங்களாக திகழ்வர். அடுத்து என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி நாடார் சமூகத்தில் மூத்த தலைவராக இருக்கிறார். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இம்முறை சென்னை மண்டலம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை பரிசீலனை பட்டியலில் சேர்த்து வைத்திருக்கின்றனர். ராதாபுரம், நாங்குநேரி, ஆலங்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதிமுகவில் இருக்கும் மாஃபா பாண்டியராஜனும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். நன்கு படித்தவர்.

ஈபிஎஸ் மேற்கு மண்டல தேர்தல் வியூகம்

நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அமைச்சரவையை அலங்கரித்தவர். இதையடுத்து பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜனும் நாடார் சமூக பின்னணியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்கின்றனர். இதேபோல் கொங்கு மண்டலத்தில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அதிமுகவிற்கு சமூக ரீதியிலும், தனிப்பட்ட செல்வாக்கு அடிப்படையிலும் வாக்கு வங்கிக்கு பலம் சேர்க்க காத்திருக்கின்றனர்.