கர்நாடகா- தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவேரி நதிநீர் பிரச்சனை என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது இது தொடர்பாக இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சட்டப் போராட்டமும் நடந்து வருகிறது. அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
காவேரி நதிநீர் பிரச்சனை
இந்த உத்தரவை ஏற்று கர்நாடக அரசும் ஆண்டுதோறும் தண்ணீரை திறந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் உச்ச நீதிமன்ற தெரிவித்த 177.25 டிஎம்சி தண்ணீரை விட காவிரியில் இருந்து கூடுதலாகவே கர்நாடக அரசு திறந்து விட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே இரு மாநிலங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சமூகமான போக்கு நிலவி வந்தது.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
ஆனால், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவு குறைந்தது. மேலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எல் நினோ, காலநிலை மாற்றத்தி காரணமாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம்.
குறைந்த தென்மேற்கு பருவமழை அளவு
ஆனால் இந்த ஆண்டு போதியமழை இல்லாததாலும், வெப்ப அலை காரணமாகவும் மேட்டூர் அணையில் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை தவிர்த்து, விவசாயத்திற்கு திறந்து விட நீர் இல்லாததால் திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், நெற்பயிர்கள் நீர்யின்றி நிலத்தில் கரூகினர்.
இத்தகைய நெருக்கடியான சூழலில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நடந்தது தற்போது முதல்வராக உள்ள டி.கே. சிவகுமார் மேகதாது அணை கட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ளார். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். பின்னர் அனைத்து கட்சிக்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
9.91 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடகா
அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான தமிழகத்தின் உரிய பங்கான 9.91 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், குடிநீர் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாலும், மழை குறைவாக பெய்ததாலும் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்தது. இதனால், தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு வருமாறு தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய் – டி.கே. சிவகுமார் சந்திப்பு
கர்நாடக அரசு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தில், தற்போதைய வறட்சி நிலை, நீர் இருப்பு மற்றும் இரு மாநிலங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தண்ணீர் பகிர்வு குறித்து ஆலோசிக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக உள்ள மேகதாது அணை திட்டம் தொடர்பாகவும் இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் இணக்கமான தீர்வை எட்ட வேண்டும் என்ற விருப்பமும் அதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த அழைப்புக்கு தமிழக அரசின் பதிலை கர்நாடக அரசு எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல் குறித்து தமிழக அரசு அல்லது கர்நாடக அரசு சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
