தேர்தல் விதி மீறல்: வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் – ஓட்டுநர் மீது வழக்கு பதிவு! – vellore dmk mayor car seized police for election code violation

தேர்தல் விதி மீறல் வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகனத் தனிக்கையில் ஈடுப்பட்டு வருகிறனர்.நேற்றைய நிலவரப்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி, 1கோடிக்கு மேல் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக கூறி, வேலூர் தி.மு.க மேயர் சுஜாதா மீது அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் நேற்று வேலூர் திமுக மேயர் சுஜாதா இளைஞர்களை அழைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக சார்பில் விளையாட்டு உபகரணங்களை வழங்க சென்றுள்ளார். இந்த தகவல் வெளிவட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததால் திமுக மேயர் சுஜாதா அங்கிருந்து உடனடியாக `TN 23 DK 9579’ என்ற எண் கொண்ட டொயோட்டா கிளான்ஸா காரில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக நிர்வாகி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

அந்த வீடியோவில், காரின் முன் பக்க இருக்கையில் பதற்றத்துடன் திமுக மேயர் சுஜாதா முகத்தை மூடிச் செல்லும் காட் சிகள் அனைத்து அதில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து வணிக வளாகத்திலிருந்து வெளியே வந்த மேயரின் காரை அங்கு பணியாற்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்றி கூறியுள்ளனர்.மேலும் காரை சோதனை செய்ய வேண்டும் என்று என்று கூறினர். ஆனால் மேயர் சுஜாதாவின் ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.இந்த சம்பவம் சந் தேகத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி வேலூர் மாநகர் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் சுபுலெட்சுமியரிடம் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: சத்துவாச்சாரியில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே உள்ள உணவகத்தில் எங்களது குழுவுடன் சாப்பிட்டு கொண்டிருந்தோம் அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் எங்களிடம் வந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பரிசு பொருட்களை வழங்குவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை இட முயன்றோம்.
அப்போது `TN 23 DK 9579’ என்ற எண் கொண்ட டொயோட்டா கிளான்ஸா காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் நான் வேலூர் மேயர் என்று கூறினார். ஒத்துழைக்க சொன்னபோது அவர் காரை வேகமாக ஓட்டி சென்று விட்டார்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இலவசமாக பரிசு பொருட்கள் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல..
உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த புகாரை அடிப்படையாக கொண்டு, தேர்தல் தொடர்பான லஞ்ச குற்றம் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கடமையை செய்ய தடை செய்தது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மேயரின் ஓட்டுநர் மீது போலீசார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, இன்று மேயர் சுஜாதாவின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.