தமிழக அரசியல் களத்தில் புதிதாக களம் இறங்கி உள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது.
முதற்கட்ட நேர்காணல் விவரங்கள்
மொத்தமாக 4,200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில், அதில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து சுமார் 60 பேரை விஜய் நேரடியாக சந்தித்து நேர்காணல் செய்துள்ளார். இந்த நேர்காணல், வேட்பாளர்களின் அரசியல் பின்னணி, மக்கள் ஆதரவு மற்றும் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் நடைபெற்றது.
டெல்லி செல்லும் விஜய்…தவெக தொண்டர்கள் மனநிலை என்ன?
விஜயின் நேரடி அணுகுமுறை
முக்கியமாக, ஒவ்வொரு விண்ணப்பதாரருடனும் “One-on-One” முறையில் விஜய் நேரடியாக பேசியது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் வேட்பாளர்களின் திறன், நம்பிக்கை மற்றும் தரைமட்ட செயற்பாடு பற்றிய தெளிவான புரிதலை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது வேட்பாளர் தேர்விலும் அதிரடி காட்டி வருகிறது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல் இன்று நடைபெற்று வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கித் தனது அரசியல் காய்களை மிக நேர்த்தியாக நகர்த்தி வரும் நடிகர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். முதற்கட்ட நேர்காணலில் ஏற்கனவே 60 வேட்பாளர்களை உறுதி செய்த நிலையில், இன்று 2-ம் கட்ட நேர்காணல் பனையூர் அலுவலகத்தில் களைகட்டியுள்ளது.
இன்று இறுதி செய்யப்படும் 50 பெயர்கள்
இன்றைய நேர்காணலில் சுமார் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் நேரடியாகச் சந்தித்துப் பேசி வருகிறார். இதன் மூலம், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் இப்போதே இறுதி செய்துவிட்டார். மற்ற கட்சிகள் இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தையிலேயே இழுபறியில் உள்ள நிலையில், விஜய்யின் இந்த வேகம் அரசியல் நோக்கர்களை வியக்க வைத்து உள்ளது.
விஜய்யின் யுனிக் இண்டர்வியூ ஸ்டைல்
இந்த நேர்காணல் சாதாரணமான ஒன்றாக இல்லாமல், மிகவும் நுணுக்கமாக நடைபெறுகிறது. தொகுதி மக்கள் மத்தியில் வேட்பாளரின் நற்பெயர் என்ன? அந்தத் தொகுதியில் திமுக, அதிமுக-வின் பலவீனங்கள் என்ன? வெற்றி பெற்றால் தொகுதிக்கு நீங்கள் செய்யப்போகும் முதல் 5 திட்டங்கள் என்ன?
போன்ற கேள்விகளால் விண்ணப்பதாரர்களை விஜய் திணறடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் தவெக
இன்று நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய அரசியல் முகங்களை ஓரம் தள்ளிவிட்டு, தூய்மையான மற்றும் படித்த இளைஞர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பனையூரில் பலத்த பாதுகாப்பு
நேர்காணல் நடைபெறுவதை ஒட்டி பனையூர் அலுவலகத்தைச் சுற்றித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு வரும் நபர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. விஜய்யின் இந்த கிடுக்கிப்பிடி நேர்காணல் முறையால், தவெக-வின் வேட்பாளர் பட்டியல் மிகவும் பலமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
