துண்டுச் சீட்டு இல்லாமல் பேசத் தயாரா? முதல்வர் விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் பகிரங்க சவால்! – aiadmk rb udhayakumar challenges cm vijay without notes

அதிமுக பெயரை சொல்லாமல் தூந்து போன சக்தி என்று பேசுகிறார் விஜய். 54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் மக்களுக்காக ஆட்சி பீடத்தில் அமைந்து திட்டங்களை வழங்கியது.இதுபோன்ற கஷ்டங்களை கடந்துதான் அதிமுக பல வெற்றி சாதனைகளை படைத்துள்ளது‌. வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் சக்தி என்ன என்பதை நிரூபிக்க வகையில் வெற்றி இருக்கும். நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் வெளிப்படையான நிர்வாகத்தை அமைப்பேன் என்று விஜய் கூறினார். ‌இதே போலத்தான் ஆம் ஆத்மி கட்சி சேர்ந்த கெஜ்ரிவால் சொன்னார். அந்த கட்சியின் அமைச்சரே ஊழலுக்காக சிறை சென்றார் தற்போதைய அந்த கட்சியின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை .

குதிரை பேரம் வழக்கு விஜய் அரசு

கரூர் சம்பவத்தில் 41 பேர்கள் பலியான போது ஓட்டம் பிடித்து 41 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த பிரச்சனை சட்டசபையில் வந்தபோது எதிர்த்து கேள்வி கேட்டு விஜய்யை காப்பாற்றியவர் எடப்பாடியார் . ஆனால் அவர் மீது மனிதாபிமானம் இல்லாமல் விஜய் பேசி வருகிறார் .கடைசித் தொண்டன் இருக்கும் வரை அதிமுகவை அழிக்க முடியாது .இந்த இயக்கத்தை அழிக்க, அபகரிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போன வரலாறு. ஏனென்றால் 2011 ஆண்டில் முதலமைச்சர் மகனாக இருந்த அழகிரி அதிமுக அழிந்து போகும் என்று கூறினார்.ஆனால் 2011 ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் வெகுண்டு எழுந்து மீண்டும் அதிமுகவை ஆட்சி கட்டில் அமர்த்தி அழகிரியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

இன்றைக்கு தமிழகத்தில் ரீல்ஸ் மோகம் அதிகரித்துக் வருகிறது. பாரத பிரதமர் கூட நீட் குறித்த சம்பவத்தில் ரீலீஸ் வெளியிட்டுள்ளார். குறிப்பாக கரப்பான் பூச்சி கட்சி வலைதளத்தில் பிரச்சாரம் செய்து ஐந்து நாட்களில் ரெண்டு கோடி நபர்களின் ஆதரவை திரட்டியது.ஆகவே கழக அம்மா பேரவை நிர்வாகிகளும் வலைதளங்களில் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் ஏதாவது பிரச்சனை என்றால் அதை வீடியோ எடுத்து வெளியிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் வந்து பிரச்சனை தீர்க்கிறார்கன் அந்த அளவில் ரீல்ஸ் அதிகரித்துவிட்டது.

இனி வலைதளங்களில் நாம் பட்டய கிளப்ப வேண்டும் அதில் வெற்றியையும் பெற வேண்டும்.இங்கிருந்து வேறு கட்சிக்கு சென்றவர்களுக்கு மரியாதை இல்லாமல் உள்ளார்கள்.அதிமுகவில் இருக்கும் வரை சாமி ,அதிமுகவை விட்டு வெளியேறிவர்கள் சாணி என்ற நிலையில் தான் உள்ளது .

பழனியில் நூறு கோடி முறைகேடு விவகாரம்

2 கோடிக்கு பத்திர பதிவு செய்துள்ளனர் .பழனி மலைக்கு அமைச்சர் ரமேஷ் மொட்டை போட்டு விட்டார் .நீட் தேர்வு குறித்து இதுவரை விஜய் வாய் திறக்கவில்லை ஆட்சிக்கு வரும் முன்பு பாசிசம், பாயாசம் என்று பேசியவர் இப்போது வாய் திறக்க மறுக்கிறார். மேகதாது பிரச்சனை பற்றி எடப்பாடியார் துண்டு சீட்டு இல்லாமல் பேசுவார் ,தைரியம் இருந்தால் எடப்பாடியாருடன் ஒரு மேடையில் விஜய் பேச முடியுமா ?

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மட்டும் ஒரு கோடியே 4 லட்சம் வாக்குகள் கிடைத்தது.ஆனால் திமுக கூட்டணி கட்சிகளுடன் வாங்கிய ஓட்டு ஒரு கோடி 16 லட்சம் தான். த.வெ.க சட்டமன்றத் தேர்தலில் 107 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளார் பெரும்பான்மை வெற்றி பெறவில்லை. மெஜாரிட்டியை கூட இரவோடு, இரவாக வாங்கித்தான் ஆட்சி நடத்த முடிகிறது. இன்றைக்கு விஜய்யை வைகோ, திருமாவளவன் இருவரில் யார் புகழ்வது என்று போட்டி நடக்கிறது.புரட்சித்தலைவி அம்மாவிற்கு கிரிஜா வைத்தியநாதன், எடப்பாடியாருக்கு சண்முகம் ஆகியோர் ஆலோசராகஇருந்தார்கள். ஆனால் இன்றைக்கு விஜய்க்கு எந்த அனுபவம் இல்லாத ஜான்ஆரோக்கியசாமி, ஜெகதீஸ் பழனிசாமி ,விஷ்ணுரெட்டி ஆகியோர் உள்ளனர் அரசு பதவிகளை விஜய் நட்பு வட்டாரத்திற்கு தாரை வார்த்து உள்ளார்.

குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை

இன்றைக்கு விஜய் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. குறிப்பாக கரூர் வழக்கில் சி.பி.ஐ வழக்கு தலையில் மேல் கத்தி தொங்குகிறது. அதேபோல ஆட்சியை தக்க வைக்க நடத்திய குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை தொடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரே நாடு ,ஒரே தேர்தல் மூலம் மூன்று வருடங்களுக்குள் தேர்தல் வரவுள்ளது இந்த ஆட்சி ஆயுள் நீடிக்காது ‌இந்த கூட்டத்தின் மூலம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆசியோடு தமிழகத்தில் எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி அமையும் வரை அயராது களப்பணி என்று மேற்கொள்ள சூளுரை ஏற்க வேண்டும் என பேசினார்.
Source link