எடப்பாடி டெல்லி விசிட்..கீரின் சிக்னல் கொடுத்த அமித்ஷா -163 தொகுதியில் உறுதியாக போட்டியிடும் அதிமுக! – aiadmk to definitely contest in 163 constituencies 2026 assembly election

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, தினகரன் அடுத்தடுத்து டெல்லி செல்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அதிமுக தேர்தல் தொகுதி பங்கீடு(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில்,இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி,தினகரன் டெல்லி செல்ல உள்ளனர்.இது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை இல்லை என்றும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சிகள் இணைந்துள்ளது.குறிப்பாக தேர்தலில், சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதா அல்லது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பதா? உள்ளிட்ட ஆலோசனைகளை நடத்த எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.

கறார் காட்டிய எடப்பாடி! கப்சிப் ஆன பிஜேபி_

மேலும் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பொறுத்தவரைக்கும் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக NDA கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி 5 தொகுதிகள் வரை கேட்டதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் 2 தொகுதிகளை தருகிறோம்.. ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுக தேர்தல் தொகுதி பங்கீடு

இந்த நிலையில், தேர்தலில் அதிமுக 163 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், 4 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை பாஜக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பில், 27 தொகுதிகளை மட்டும் வழங்க முடியும் என கூறப்படுகிறது.ஆனால், காங்கிரஸ் கட்சியை விட தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருப்பதன் காரணமாக கூடுதல் 27+3 என 30 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.இதற்கு அதிமுக கிரின் சிக்னல் கொடுத்துள்ளார்.
மேலும்,கடந்த 2021 தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இந் த முறை பாமக பிளவுபட்டு உள்ளது. இதன்காரணமாக பாமகவுக்கு 18 இடங்கள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந் து அமமுக 13 தொகுதிகள் வரை கேட்டதாகவும், அதற்கு அதிமுக 9 தொகுதிகள் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜீகே வாசனின் தமிழ்மாநில காங்கிரஸுக்கு 3 இடங்களும், ஐஜேகேவுக்கு 2 இடங்களும்,ஏ.சி. சன்முகத்தின் புதிய நீதி கட்சிக்கும் 2 இடங்களும், ஜான் பாண்டியன் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி டெல்லி சந்திப்பு

இதனைத் தொடர்ந்து எடப்பாடி டெல்லி விசிட்டில் சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம்.அதே போல் சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.இதனை அமித் ஷா ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி 163 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் திட்டத்தை முன்வைத்து உள்ளது. இதற்கான முக்கிய காரணம், திமுக கூட்டணிக்கும் 163 தொகுதிகளில் தமது வேட்பாளர்களை “உதயசூரியன்” சின்னத்தில் நிற்கவைக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக தனிப்பெரும்பான்மையை பெற வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதிமுகவுடன் இணைந்து இருந்த சில பக்கக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடுகள் வழங்கப்படலாம். புரட்சி பாரதம், இந்திய குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வேர்ட் பிளாக், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.மொத்தமாக, பாஜக கூட்டணியில் இணைந்த 66 தொகுதிகளும் 168+66 சேர்த்தால், 234 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி தனது 163 இடங்களைக் குறிக்கிறது. இது அவர்களின் தேர்தல் இலக்கு மற்றும் வெற்றி வாய்ப்பை காட்டுகிறது.