ஒரு சர்வதேச போட்டியும் விளையாடாமல்… ஐபிஎல் கோப்பையை தூக்கிய கேப்டன்கள்

சென்னை,

ஐபில் வரலாற்றில் பொதுவாக சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களே அணிகளை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். ஆனால், ஒரு சர்வதேச டி20 போட்டியும் விளையாடாத 2 கேப்டன்கள் கோப்பையை வென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த பட்டியலில் முதலில் இடம்பிடிப்பவர் ஷேன் வார்ன். 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில், ராஜஸ்தான் அணியை அவர் கேப்டனாக வழிநடத்தி, பல வலுவான அணிகளை வீழ்த்தி சாம்பியனாக மாற்றினார்.

Also Read
ஐபிஎல் – மற்றொரு மைல்கல்… புதிய சாதனைக்கு அருகில் விராட் கோலி
ஒரு சர்வதேச போட்டியும் விளையாடாமல்… ஐபிஎல் கோப்பையை தூக்கிய கேப்டன்கள்

அதேபோல், பல ஆண்டுகள் கழித்து இந்த அரிய சாதனையை மீண்டும் நிகழ்த்தியவர் ரஜத் பட்டிதார். 2025 ஐபிஎல் சீசனில், ஒரு சர்வதேச டி20 போட்டியும் விளையாடாத இவர் பெங்களூரு அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளாக இருந்த காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Source link