தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 – முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 12D படிவம் வழங்கப்படுகிறது. – tamil nadu assembly election 2026 form 12d issued for senior citizens and disabilities

தேர்தலை முன்னிட்டு 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 12D Form வழங்கப்பட்டு வருகிறது.

Tamilnadu Election 2026(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 -ஐ முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பப் படிவம் 12D வழங்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ள 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் தேர்தல் விண்ணப்பப் படிவம் 12D-யைப் பெற்று விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வேலைகள் வேகம் எடுக்க தொடங்கி இருக்கின்றன அந்த வகையில் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மேலும் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறும் காலத்தை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்த இருக்கிறது.

ஏற்கனவே பொது விதிகளாக பிரச்சாரத்தின் போது சாதி, மத, இன ரீதியான பிரச்சினைகளை தூண்டக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு எச்சரித்து இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது, இன்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது தரவுகளை தரும் போது அதனுடன் தாங்கள் பயன்படுத்தும் சமூக வலைதள கணக்குகளின் தரவுகளையும் உடன் தர வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது.
இதற்கிடையில் தான் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 85 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்ப படிவம் 12 D வழங்கப்பட்டிருக்கிறது.
விருப்பமுள்ள 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் தங்களின் தேர்தல் விண்ணப்ப படிவம் பெற்று 12 D -ஐ விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஐந்து கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்களிக்க உள்ளனர். இதில் 85க்கும் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய குடிமக்கள்,மாற்றுத்திறனாளிகள் 40 சதவீதம் பேர் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் தகுதியுள்ள வாக்காளர்கள் 12 D Form -ஐ சமர்ப்பித்து வீட்டிலிருந்து வாக்குகளை செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எவ்வாறு செயல்படும்?

85 வயதுக்கு மேற்பட்ட தகுதி பெற்ற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலகர்கள் (BLO) நேரடியாக சென்று form 12D -ஐ வழங்குவார்கள். அதேபோல் நிரப்பப்பட்ட படிவத்தையும் அவர்களிடமிருந்து BLO -க்களே நேரடியாக பெற்றுக் கொள்வார்கள், எனவும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 12 படிவம் அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் ஏப்ரல் மாதம் நான்காம் தேதிக்குள் திரும்ப வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையில் வாக்குச்சாவடி நிலையை அலுவலகங்களை தொடர்பு கொள்ள முடியாதவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசதி முழுமையான விருப்பத்தேர்வு என தேர்தல் ஆணையத்தின் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரில் சென்று வாக்களிக்க விரும்பும் தகுதி பெற்ற வாக்காளர்கள் 12D வடிவத்தை சமர்ப்பிக்க தேவையில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.