2026 சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸின் எலக்சன் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது! – 2026 legislative assembly elections congress election committee meeting held yesterday

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கான தேர்தலை பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றது. இந்த சூழலில்தான், சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெறும் மாநில தேர்தல் குழு கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே வி தங்கபாலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிரிஷ் ஜோடங்கர் கலந்து கொண்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட திமுக உடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து மாநில தேர்தல் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டம் நிரைவடைந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “மூன்று முக்கிய தலைவர்களை அழைத்து ஆலோசனை செய்திருக்கிறோம். காங்கிரஸ் கமிட்டியினுடைய எலக்சன் கமிட்டி(PEC) என்று சொல்வார்கள், அந்த கூட்டமும் நடைபெற்றது. எல்லோருடனும் கலந்துரையாடி எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம் என்று வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை நாங்கள் ஆய்வு செய்து எடுத்திருக்கின்றோம்” எனவும் கூறிய அவர், நாளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றோம் எனவும் தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில், 17 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் இருப்பதாக பேசிய அவர், நாம் ஏற்கனவே 21 தொகுதியில போட்டி போட்டியிட்டிருந்தோம் என பேசியிருந்தார்.

அதிமுகவின் டெல்லி பயணம்

தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடபடியின் சமீபத்திய டெல்லி பயணம் குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, “அதிமுக தொடர்ந்து டெல்லி பயணம் மேற்கொண்டு வராங்க. அதிமுக கட்சியினுடைய தலைவர் அமித்ஷா தான். அவர்தான் கூட்டணியை தீர்மானிப்பார், அவர்தான் முடிவு எடுப்பார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாஜக, அதிமுக முகத்தை முகமூடியாகப் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் நுழையலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தக்க பாடத்தை தேர்தலில் புகட்டுவார்கள்” என்றார்.
அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் பி ஜோதிமணி, “அதிமுகவைப் பொறுத்தவரை அது பாஜக கட்டுப்பாட்டில்தான் எல்லாம் இருக்கின்றது, அதனால் அவர்கள் டெல்லி சென்றது ஒரு விஷயம் இல்லை. அதிமுகவுக்கு ஓனர் பாஜகவும் அமித்ஷாவும் தான். என்றைக்குமே எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கூட்டணி அதிமுக கூட்டணி என்கிறார். ஆனால் அவர்கள் வந்து என்டிஏ (NDA) கூட்டணி என்று ரொம்ப தெளிவா சொல்றாங்க. பாஜக தமிழ்நாட்டில் ஏதோ ஒரு விதத்துல வந்து பின்வாசல் வழியா ஆட்சிக்கு வந்தா நம்மளுடைய மொழிக்குப் பேரழிவு வரும், நம்முடைய இனத்துக்குப் பேரழிவு வரும், நம்மளுடைய வரலாறு, பாரம்பரியம், நம்மளுடைய அறிவியல் சார்ந்த சிந்தனைகள், நமது எதிர்கால வளர்ச்சி எல்லாத்திலுமே ஒரு பெரிய மோசமான எதிர்விளைவுகளை நம்ம எதிர்கொள்ள நேரிடும்.

காங்கிரஸ் கட்சி பாஜக ஒன்றும் மாதிரி எல்லா மாநில உணர்வுகளையும் உள்ளடக்குகிற ஒரு கட்சி கிடையாது. அவங்க ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சாமின்னு சொல்ற ஒரு கோஷ்டி. அதனால இது டெல்லிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தேர்தல்ங்கிறது தான் சரின்னு நான் நினைக்கிறேன்” என அவர் பேசியிருக்கிறார்.

Source link