தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்தாய் வாழ்த்தை முதலில் பாட தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதில், நிறைய மாறுதலான வழிகாட்டுதல்களை ஆளுநர் மாளிகை அளித்ததாக கேள்விப்படுகிறோம். பாஜக ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளின் வாழ்த்தே முதலில் பாடப்படுகிறது. தமிழகத்தில் மாறாக செய்வது தவறான விஷயம். தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்க வேண்டும்

அரசுப்பணி, ஆலோசனை கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்து முடிவெடுப்போம். மேகதாது விவகாரம் குறித்து பல தரப்பினரிடமும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் பின்னர் எந்த நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் என முதல்வர் முடிவெடுப்பார்.இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.
