தோஹா
கத்தார் நாட்டில் இருந்து வழக்கம்போல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பணிக்காக இன்று புறப்பட்டது. அதில் மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், அது கடல்வழியே பறந்து செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.
இதனால், ஹெலிகாப்டர் நீருக்குள் விழுந்தது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்க தொடங்கினர். இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இதனை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த விபத்துக்கான காரணம் என்றும் அது தெரிவிக்கின்றது. காணாமல் போன நபரை தேடும் பணியும் நடந்து வருகிறது.
