அதிமுகவின் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க செல்லூர் ராஜு சென்னைக்கு வந்திருக்கின்றார். அப்போது ஓபிஎஸ் திமுகவிற்காக பரப்புரை செய்து வருவது குறித்து தன் கருத்தினை கூறி விமர்சித்துள்ளார் செல்லூர் ராஜு
முக்கிய அம்சங்கள்:
ஓபிஎஸ் பரப்புரை
செல்லூர் ராஜு விமர்சனம்
இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன் கருத்தை கூறி கடும் விமர்சனம் செய்திருக்கின்றார். தேர்தல் குறித்து கலந்து ஆலோசிக்க செல்லூர் ராஜு சென்னைக்கு வந்திருக்கின்றார். அப்போது அவர் அதிமுகவிற்கான வெற்றிவாய்ப்புகள் குறித்தும், திமுக அரசை விமர்சித்தும் பேசினார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பரப்புரை குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் திமுகவிற்காக பரப்புரை செய்யும்போது அதிமுகவை அவர் கடுமையாக விமர்சித்து வருவது குறித்து செல்லூர் ராஜுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, நேற்று கூட சிவகங்கையில் ஓபிஎஸ் பேசினார், கூட்டமே இல்லை. ஆளுக்கு ஐநூறு ருபாய் கொடுத்து வேனில் ஆட்களை திரட்டிக்கொண்டு வருகின்றனர். பணம் கொடுத்தும் கூட்டம் வரவில்லை. இவரை போய் ஏன் பார்க்கவேண்டும் என்ற மனநிலையில் தான் அனைவரும் இருக்கின்றனர்.
ஆனால் இதையெல்லாம் நான் சொல்லவில்லை, மக்கள் தான் சொல்கின்றனர். ஓபிஎஸ் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. ஆனால் அவரின் நடவடிக்கைகளால் தான் மக்கள் மத்தியில் இப்படி ஓரு பெயர் அவருக்கு இருக்கின்றது. சாதாரண ஒரு ஆளான ஓபிஎஸ்ஐ அதிமுக என்கின்ற கட்சி மூன்று முறை தமிழக முதல்வராக உட்கார வைத்து அழகு பார்த்தது. அம்மா ஜெயலலிதா அவர்கள் ஓபிஎஸ் ஐ முதல்வராக உயர்த்தினார். சட்டமன்ற உறுப்பினர், பலதுறைகளில் அமைச்சர் பதவி மற்றும் முதலமைச்சர் போன்ற பல பதவிகளில் ஓபிஎஸ் ஐ அமரவைத்து அழகு பார்த்தனர்.
அப்படி ஒரு கட்சி அழிந்துவிடும் என ஓபிஎஸ் தற்போது பேசி வருகின்றார். இந்த எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கு ஓ.பன்னீர் செல்வமும் ஒரு உதாரணமாகிவிட்டார். தற்போது முக ஸ்டாலினை பாராட்டி பேசும் இவர் தான் ஒருகாலத்தில் அவரை கடுமையாக பேசினார். அம்மா ஜெயலலிதா இருக்கும்போது ஓபிஎஸ் ஸ்டாலினை எப்படியெல்லாம் விமர்சனம் செய்திருக்கின்றார்.
தற்போது ஜெயலலிதா அம்மா இல்லை என்றதும் மாறிவிட்டார் என்றார் செல்லூர் ராஜு. இதனைத்தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் ஆட்சியமைக்கப்போகின்றது. எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வராக பதவியேற்க போகின்றார். எனவே தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும், தேர்தலுக்கான பிரச்சாரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்க சென்னை வந்துள்ளேன்.
பொதுச்செயலாளரின் ஆணைக்கு இணங்க ஆலோசனை நடத்தப்பட்டது. அத்தனை குழு உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என செல்லூர் ராஜு பேசினார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் பரப்புரை செய்து வருகின்றார். ஆனால் அந்த பரப்புரைக்கு கூட்டமே இல்லை. மக்கள் ஓபிஎஸ்ஐ மறந்துவிட்டார்கள் என செல்லூர் ராஜு கூறுகின்றார்.
அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டவர் தான் செங்கோட்டையன்- EPS கோபியில் பேச்சு!
அதே சமயம் திமுகவினர் ஓபிஎஸ் அவர்களின் வருகையால் தென்மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சொல்கின்றனர். இதில் யார் சொல்வது உண்மை என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிய வரும். ஆனால் பெரும்பாலானோர் ஓபிஎஸ் வருகையால் தென் மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று தான் சொல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
