Bjp Jayaprakash Advice,திருமாவளவன் திமுகவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளது: பாஜக ஜெயபிரகாஷ் அட்வைஸ் – bjp jayaprakash advice to vck leader thirumavalavan on seatsharing issue

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தங்களுக்கு குறைவான தொகுதிகளை வழங்கி இருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாஜக ஜெயப்ரகாஷ் அட்வைஸ் செய்திருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

திருமாவளவனுக்கு வாய்ப்புகள் அதிகம்

பாஜக ஜெயப்பிரகாஷ் அட்வைஸ்

bjp jayaprakash advice to thirumavalavan
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியான நிலை நீடித்துக்கொண்டு வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என கூறி வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சியும் தங்களுக்கு குறைவான தொகுதிகளே கிடைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். மறுபக்கம் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியை விட்டே வெளியேறிவிட்டனர். இவ்வாறு திமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பமும் சர்ச்சையும் நிலவி வருகின்றது.இந்நிலையில் திருமாவளவன் இரு தினங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் பத்து தொகுதிகளுக்கு குறைவாக தான் கிடைப்பதாக பேசியது வைரலானது. திமுகவின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்தையால் திருமாவளவன் ஏமாற்றத்தில் இருப்பதாக தெரிகின்றது. ஆனாலும் அவர் திமுக கூட்டணியிலேயே தொடருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் தான் பாஜகவை சேர்ந்த ஜெயப்ரகாஷ் திருமாவளவனுக்கு அட்வைஸ் வழங்கியிருக்கிறார். திருமாவளவனுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.அவரை திமுகவினர் ஏமாற்றி வருகின்றனர் என கூறி அறிவுரை வழங்கியிருக்கிறார் பாஜக ஜெயப்ரகாஷ். அவர் கூறியது, திமுக என்பது ஒரு குடும்ப கட்சி, அதைப்போல காங்கிரஸ் கட்சியும் குடும்ப கட்சி தான். தேமுதிகவும் கூட குடும்ப கட்சி தான். இக்கட்சிகள் அனைத்தும் மேல்தட்டு கட்சிகள். இவர்களுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது.
ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் இக்கட்டான நிலையில் இருக்கின்றார். ஏற்கனவே மதிமுக கட்சியை திமுக விழிங்கிவிட்டனர். திருமாவளவன் உயர்ந்த நிலையில் இருக்கின்றார். அப்படிப்பட்ட திருமாவளவனின் நிலை திமுகவில் மோசமாக உள்ளது. உயர்ந்த நிலையில் இருக்கும் திருமாவளவன் அவர்களே, குறைந்த தொகுதிகள் தான் கொடுக்கப்பட்டு இருப்பதாக புலம்புகிறார். குறைந்த சீட்டுகளை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றார்.
திமுக கூட்டணியில் புதிதாக இணைந்த தேமுதிக அவர்களின் சொந்த சின்னத்திலேயே பத்து தொகுதிகளுக்கு மேல் நிற்கபோகின்றார்கள். ஆனால் இத்தனை காலம் திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவனை சமூக நீதி என சொல்லி சொல்லி திமுக ஏமாற்றி வருகின்றனர். திருமாவளவனுக்கு நான் ஒரு அட்வைஸ் சொல்கின்றேன். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் குடும்ப கட்சிகள். திமுகவில் ஸ்டாலினின் மகன் இருக்கின்றார். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி இருக்கின்றார். அதைப்போல தேமுதிகவில் விஜய பிரபாகரன் இருக்கின்றார்.
இவ்வாறு திமுக கூட்டணியில் அனைவருமே குடும்ப காட்சிகளாக இருக்கின்றனர். ஆனால் உங்களுக்கு தொண்டர்கள் மட்டுமே தான் உள்ளனர். எனவே தொண்டர்களை கைவிட்டுவிடாதீர்கள். கடந்த 15 வருடமாக விசிக திமுக கூட்டணியில் இருக்கின்றனர். அதே தேமுதிக கடந்த பல வருடங்களாக திமுகவை எதிர்த்த கட்சி. தங்களை எதிர்த்த கட்சிக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்துவிட்டு ஒன்றோடு ஒன்றாக இருந்த விசிக கட்சிக்கு குறைவான தொகுதிகளை கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
எனவே விசிக தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை திருமாவளவன்உணர வேண்டும். அவருக்கு நெறைய வாய்ப்புகள் உள்ளது. அவர் திமுகவிடம் சமரசம் பேச வேண்டிய அவசியமே இல்லை. இன்று மதிமுகவிற்கு சொற்ப தொகுதிகளையே வழங்கி இருக்கின்றனர். அதே நிலை விசிக கட்சிக்கும் வர கூடாது. திருமாவளவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கூறி அட்வைஸ் செய்துள்ளார் பாஜக ஜெயப்ரகாஷ்.
இந்நிலையில் என்னதான் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கொள்கையின் அடிப்படையில் விசிக கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் இருப்பார்கள் என தெரிகின்றது. ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே தேமுதிகவிற்கு அதிகமான தொகுதிகளை கொடுத்துவிட்டு விசிகவிற்கு குறைவான தொகுதிகளை கொடுப்பதை தான் குறி வைத்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு செல்லும் கட்சி எது? திருமாவளவன் பேட்டி ..!

இதனால் திமுக கூட்டணிக்குள் பிளவு வருமா ? என பேச்சுக்கள் போய்க்கொண்டு இருக்கின்றது. இருந்தாலும் இதுபோன்ற சர்ச்சைகளை மிக விரைவில் திமுக தீர்த்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடமும் திமுக ஆதரவாளர்களிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.