ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா எங்கிருக்கிறார்? சிஐஏ தீவிர தேடல்…. – mojtaba khamenei skips nowruz appearance raises questions

ஈரானின் புதிய உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி பொதுவெளிக்கு வராதது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Mojtaba Khamenei – Supreme Leader of Iran(புகைப்படங்கள்Samayam Tamil)
கடந்த பிப்ரவரியில் ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் வரைபடத்தை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்கதலில் அவர் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தால் மேற்காசியா முழுவதும் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது.அதிலும் குறிப்பாக ஈரான் இந்த செயலுக்கு எதிர் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட பல நாட்களாக தொடரும் இந்த போர், உலகளாவிய பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்காவின் தளவாடங்களை குறிவைத்து தாக்கிய ஈரான் மிக முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அரம்கோவையும் தாக்கியிருக்கிறது. மேலும் எண்ணெய் பொருளாதார வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வைக்கக்கூடிய ஹார்மோஸ் நீர்முனையையும் ஈரான் மூடியிருக்கிறது.
இந்த சூழலில் தான் ஈரானின் புதிய உச்ச தலைவராக இறந்த அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டார்.ஆனால் ஈரானின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அவரை கொல்வோம் என ஏற்கனவே அமெரிக்கா அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவரை காணவில்லை எனவும் விமர்சித்திருக்கிறது. மேலும் கண்ணுக்கு புலப்படாத ஒரு இடத்தில் அவர் பதுங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் CIA, Mossad உள்ளிட்ட உளவு முகமைகள் மோஜ்தபா கமேனியை தேடி வருகின்றன. பாரசீகத்தின் புத்தாண்டான நவ்ரூஸ் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈரானின் உச்சத்தலைவர் உரையாற்றுவது வழக்கம். தனது தந்தையை பின்பற்றி மோஜ்தபா கமேனியும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவரிடம் இருந்து வெறும் எழுத்துப்பூர்வமான அறிக்கை மட்டுமே வெளியானது.
இந்த அறிக்கை அவரது இருப்பிடம் மற்றும் அவரின் பாதுகாப்பு குறித்த கேள்வியை தீவிரப்படுத்தி இருக்கிறதாக சொல்லப்படுகிறது. ஈரானிய செய்தி முகமைகள் வெளியிட்ட அறிவிப்பின்படி ஈரானே அதிகாரிகளுடன் மோஜ்தபா கமேனி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
மேலும் மோஜ்தபா பாரசீக புத்தாண்டை முன்னிட்டு அனுப்பிய செய்தி அறிக்கையில் சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.ஆனால் CIA இந்த புகைப்படங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது மோஜ்தபா உயிரோடு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க ஈரானிய அதிகாரிகள் பழைய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து Axois எது நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர்” மோஜ்தபா கமேனி தான் ஈரானிய அதிகாரத்தை ஏற்று நடத்துகிறார் என்பதில் எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை.” என பேசியிருக்கிறார். மொஜ்தபா பொதுவெளிக்கு வராமல் இருப்பது ஒரு மர்மமாகவே இருக்கும் நிலையில், அது பாதுகாப்பு குறித்த அச்சத்தால் தான் அவர் பொதுவெளிக்கு வருவதில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தின் ஈரான் திட்டத்தின் இயக்குநரான ராஸ் ஜிம்ட் தெரிவித்த சமீபத்திய கருத்துக்கள் மோஜ்தபா பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது. உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த காரணங்களால் தான் அவரால் பொதுவெளியில் வரமுடியவில்லை என்றும், அதன்பொருட்டே அவர் ‘நவ்ரூஸ்’ நாளில் மக்களிடையே உரையாற்ற வில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானின் உச்சந்தலைவரான மொஜ்தபா செயல்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.