ஈரான்–இஸ்ரேல் பதற்றம் மத்தியில்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய எல்பிஜி கப்பல்! – india lpg ship crosses hormuz strait amid iran israel war

இந்திய எல்பிஜி டேங்கர்களான “நந்தா தேவி” மற்றும் “ஷிவாலிக்” ஆகியவை ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்துவிட்டன. இந்திய கடற்படையின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், இந்தக் கப்பல்கள் இப்போது இந்தியாவை நோக்கிச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி எல்பிஜி கப்பல்(புகைப்படங்கள்Samayam Tamil)
ஈரான் – இஸ்ரேல் போர் என்பது தொடர்கதையாகவே உள்ளது. எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் கூட்டு போராக மாறியது.

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் 300 பள்ளி குழந்தைகள் 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உயிரிந்தார். இதனால், ஆத்திரமடைந்த ஈரான், 8 வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.மேலும், அமெரிக்கா ஈரான் போரை நாங்கள் தான் முடித்து வைப்போம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமெரிக்கா, ஈரான் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதனால், ஈரான் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான கச்சா எண்ணெய் கடல்வழித் தடத்தை மூடியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் உலகளாவிய எரிபொருள் மற்றும் எல்பிஜி நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

மோதலுக்கு மத்தியில், இந்தியாவின் எல்பிஜி (சமையல் எரிவாயு) சுமந்து சென்ற நந்தா தேவி எல்பிஜி கேரியர் வெள்ளிக்கிழமை இரவு ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்தது. இந்தக் கப்பல் இந்தியாவின் எரிசக்தி விநியோகத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படும் 46,000 மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) சுமந்து செல்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமை, இந்திய கப்பல்கள் தடுக்கப்படாது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வரும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

இந்தியாவில் எல்பிஜி பற்றாக்குறை

முன்னதாக, இந்தியாவின் முதல் எல்பிஜி டேங்கர் ஷிவாலிக் எல்பிஜி கேரியர் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து, இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திறந்த கடலுக்குச் சென்று இந்திய கடற்படையின் வழிகாட்டுதலின் கீழ் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்க அதிகாரிகளின் அளித்த தகவலின் படி, இரண்டு கப்பல்களின் இயக்கமும் இந்திய கடற்படையால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது, இதனால் எரிசக்தி விநியோகம் உணர்திறன் வாய்ந்த கடல் பாதை வழியாக இந்தியாவை பாதுகாப்பாக அடைய முடியும் என்று கூறப்படுகிறது.

Russia-Ukraine போர்:காரணங்கள் மற்றும் முக்கிய விவரங்கள்

80,800 டன் கச்சா எண்ணெயை ஏற்றி வரும் இந்திய கப்பல்

இந்தியா தனது எல்பிஜி தேவைகளுக்கு வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வது, இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க ஒரு பயனுள்ள அமைப்பு வகுக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. இந்த பெரிய அளவிலான எல்பிஜி ஏற்றுமதியுடன், நாட்டில் எரிவாயு நெருக்கடி வரும் நாட்களில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்களால் ஏராளமான கப்பல்கள் கடலில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.