ரயிலில் நீண்ட பயணத்தில் பயணிகள் பயன்படுத்தும் தண்ணீர்.. எப்படி சேமிக்கப்படுகிறது தெரியுமா? ஆச்சரியத் தகவல்கள்! – how water is supplied in train water storage system india

நாம் அன்றாட நீண்ட தூர போக்குவரத்திற்காக ரயில் சேவையை பயன்படுத்துகிறோம்.அப்படி ஓடிக்கொண்டு இருக்கும் ரயிலில் எப்படி தண்ணீர் இருக்கிறது? எத்தனை பயணிகள் பயன்படுத்தும் அளவிற்கு தண்ணீர் எங்கே சேமிக்கப்படுகிறது என்பது குறித்து எப்போதாவது யோசித்தது உண்டா ?இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

indian water service
இந்தியாவில் முக்கிய போக்குவரத்து சேவைகளாக கருதப்படுவது விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து. இதில் பெரிதும் மக்கள் பயன்படுத்துவது ரயில் போக்குவரத்து தான். அதுமட்டுமின்றி, இந்தியாவிற்கு வருவாய் ஈட்டும் சேவைகளில் ரயில் சேவை முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் அதிகமான மக்களை பாதுகாக்கவும், விரைவாகவும் கொண்டு செல்லும் வகையில் இருப்பதால், இது பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக உள்ளது. குறிப்பாக நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து சேவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மக்கள் பெரிதும் பயன்படுத்தும் ரயில் சேவை
 மக்கள் பெரிதும் பயன்படுத்தும் ரயில் சேவை

நாம் ரயிலில் பயணம் செய்யும்போது அங்கு பல சுவாரசியமான அம்சங்கள் நிறைந்திருக்கும். அதில், முக்கியமான ஒன்று தண்ணீர் வசதி தான் கழிவறை பயன்பாடு கைகளில் கழுவுதல் போன்ற தினசரி தேவைகளுக்கு பயணிகள் அடிக்கடி தண்ணீரை பயன்படுத்துகின்றன. இவ்வளவு தண்ணீர் எங்கே இருந்து வருகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

ரயில் பெட்டிக்கு அடியில் பெரிய எஃகு தொட்டி
ரயில் பெட்டிக்கு அடியில் பெரிய எஃகு தொட்டி

உண்மையில் ஒவ்வொரு ரயில் பெட்டியின் அடிப்பகுதியில் பெரிய எஃகு தொட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை அண்டர் கேரேஜ் வாட்டர் டேங்க் என அழைக்கப்படுகிறது. இந்த தொட்டியில் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது பொதுவாக ஒவ்வொரு தொட்டியிலும் 400 ஒரு முதல் 500 லிட்டர் வரை தண்ணீர் நிரப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

அண்டர் கேரேஜ் வாட்டர் டேங்க் வசதி
 அண்டர் கேரேஜ் வாட்டர் டேங்க் வசதி

ஒவ்வொரு பெட்டிக்கும் தனி தனி தொட்டி இருப்பதால் பயணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளது என கூறப்படுகிறது.ஆனால் நீண்ட பயணங்களில் இந்த தொட்டிகளில் உள்ள தண்ணீர் குறைந்து விட்டால் என்ன செய்வார்கள் ? என்ற கேள்வியும் நம்மில் பலருக்கு எழும். அதற்காகவே அண்டர் கேரேஜ் வாட்டர் டேங்க் வசதியை பயன்படுத்தப்படுகிறது இந்த அமைப்பு முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்ட உள்ளன.

ரயில் தண்ணீர் சேமிப்பு அமைப்பு
 ரயில் தண்ணீர் சேமிப்பு அமைப்பு

குறிப்பாக நீங்கள் கவனத்தில் இருந்தால் தண்டவாளங்களுக்கு இடையில் குழாய் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும். ரயில் நிலையத்தில் நின்ற போது அந்த குழாய்கள் மூலம் தண்ணீர் மிக வேகமாக இந்த தொட்டிகள் நிறுவப்படுகிறது. சில நிமிடங்களையும் முழு தொட்டியும் நிரம்பிவிடும். இதனால் ரயில் தொடர்ந்து பயணித்தாலும் பயணிகளுக்கு தேவையான தண்ணீர் எப்பொழுதும் கிடைக்கும் ஏற்பாடுகளை இந்தியன் ரயில்வே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.