கொரோனா கால ஒற்றுமை இப்போது தேவை- போர்ச் சவால்களை எதிர்கொள்ளப் பிரதமர் விடுத்த அழைப்பு – unity like during the covid period is needed now prime minister call to face wartime challenges.

மேற்கு ஆசியப் போர்ச் சூழல் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியினை தெரிவித்து உள்ளார்.

PM Modi West Asia Conflict Speech(புகைப்படங்கள்Samayam Tamil)
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை உலகளவில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா எப்போதும் தயார் நிலையில், ஒன்றுபட்டு, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். கொரோனா காலத்தில் நாடு ஒன்றுபட்டு எதிர்கொண்டது போல, இன்றும் அதே மனநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், சவால்களை பொறுமையுடனும் உறுதியுடனும் சமாளிக்க வேண்டும் என்றும் லோக்சபாவில் பேசும்போது அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் – அனைத்து துறைகளும் அலர்ட்

தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் தவறான செயல்களில் ஈடுபடலாம் என எச்சரித்த பிரதமர், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் அனைத்து அமைப்புகளும் அதிகப்படியான எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடலோர பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் முக்கிய கட்டமைப்புகள் அனைத்தும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Amid ‘Modi Modi’ chants, expats welcome PM Modi

பொய்யான தகவல்கள் – மாநிலங்களுக்கு எச்சரிக்கை

இந்த நேரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் பொய்யான செய்தி பரப்புதல், குவிப்பு மற்றும் கருப்பு சந்தை செயல்பாடுகளை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவுக்கு உள்ள சவால்கள் – பலதரப்பு தாக்கம்

மேற்கு ஆசியா மோதல் இந்தியாவுக்கு பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான ரீதியில் பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் இந்த பிராந்தியத்திலிருந்து பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதால், இந்த மோதல் வர்த்தகத்தையும் நேரடியாக பாதிக்கிறது.

இந்தியர்களின் பாதுகாப்பு – அரசு நடவடிக்கைகள்

கல்ப் நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி பல மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் நேரடியாக பேசியதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிலர் உயிரிழந்ததும், சிலர் காயமடைந்ததும் வருத்தத்துக்குரியது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கூறினார். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றன.

இந்தியாவின் எரிபொருள் சார்பு – ஏன் இது முக்கியம்?

உலகிலேயே கச்சா எண்ணெயை அதிக அளவில் நுகரும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. நமது தேவையின் சுமார் 85% இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், மேற்கு ஆசியாவில் உருவாகும் போர் சூழல் இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த சவால்களை சமாளிக்க இந்தியா வைத்திருக்கும் முக்கியமான பாதுகாப்பு தான் 74 நாள் கச்சா எண்ணெய் இருப்பு.

மூலோபாய இருப்பு – 9.5 நாட்களுக்கு பாதுகாப்பு

அவசர கால தேவைகளுக்காக நிலத்தடி பாறைக் குடைவுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய், இந்தியாவின் மூலோபாய இருப்பாகும். விசாகப்பட்டினம், மங்களூர், பாடூர் ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளில் சுமார் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளது. இது போர்க்கால சூழலில் பாதுகாப்புப் படைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இறுதி ஆதாரமாக கருதப்படுகிறது.

சுத்திகரிப்பு நிலைய இருப்பு – 64.5 நாட்கள் இயல்பு நிலை

IOCL, BPCL, HPCL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் Reliance, Nayara போன்ற தனியார் நிறுவனங்களின் கிடங்குகளில் உள்ள எண்ணெய் இருப்பு, அன்றாடப் பயன்பாட்டிற்கான விநியோகத்தை உறுதி செய்கிறது. கடல் வழிப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டாலும், இந்த 64.5 நாள் இருப்பு நாட்டை இயல்பாக செயல்படச் செய்யும்.

2.5 மாத அவகாசம் – இந்தியாவின் ராஜதந்திர பலம்

மொத்தம் 74 நாட்கள் இருப்பு என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; அது ஒரு முக்கியமான “ராஜதந்திர அவகாசம்”. வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வராத சூழலிலும், இந்தியா 2.5 மாதங்கள் தன்னிறைவு நிலையை தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்த காலத்தில், மாற்று நாடுகளான ரஷ்யா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து இறக்குமதி ஒப்பந்தங்களை அமைக்கவும், போர் பதற்றத்தை குறைக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் இந்தியாவுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.