NDA கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் -EPS இறுதி முடிவு! – aiadmk district secretaries meeting is scheduled to be held in royapettah today

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நாளிலிருந்து அரசியல் கட்சிகளுக்கிடையே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யும் நடவடிக்கையில் போட்டி போட்டுக் கொண்டு நடத்தி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் 2026

இதனால் தமிழக மக்களிடையே எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை திமுக ,அதிமுக, நாம் தமிழர் ,தவெக உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனை சூழல் நிலவு உள்ளது. இந்த சூழலில் ,ராமதாஸ் சசிகலா புதிய கூட்டணி ஒன்று உருவாகி அரசியல் களத்திற்கு ட்விஸ்ட் கொடுத்து உள்ளது. இந்த நிலையில்,தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, ஐ ஜே கே ,பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து உள்ளது. கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ,டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேல்முருகன் போடும் மாஸ்டர் பிளான்? இது தான் வியூகமா?

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு

அப்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக நேற்று தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது. இதற்காக மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல் முருகன் பாஜக மாநில தலைவர் நயனார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி ஸ்ரீநிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டதாக கூறினார். மேலும் திமுக ஆட்சியை நிச்சயம் அதிமுக தலைமையிலான nda கூட்டணி அகற்றும் என்று கூறினார் மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து எப்போதும் வேண்டுமானாலும் நல்ல செய்தி வரலாம் என்று கூறினார். இதனால் அதிமுக பாஜக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்று வெளியாகும் என்று அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்பட்டது.

பாஜக -பாமக -அமமுக -கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு

தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி, நயனார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ,டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, வரவிருக்கும்பாமக தலைவர் அன்புமணி டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .இந்த ஆலோசனைகளின் முடிவில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

அதன்படி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும் பாமகவுக்கு 18 தொகுதிகளும் அம முகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்து, ஆலோசிக்கப்படுவதோடு கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் வழங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதையும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் இடையே விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது இதனால் அரசியல் களம் மிகுந்த பரபரப்பில் காணப்படுகிறது.