பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்தே தனது முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். பிரச்சாரப் பணிகளுக்காகக் கொடுங்கையூர் அருகே உள்ள கண்ணதாசன் நகரில் ஒரு பங்களா வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இது அவரது பிரச்சார மையமாகச் செயல்படும்.
வடசென்னையின் முக்கிய தொகுதி
வடசென்னையின் முக்கியத் தொகுதியான பெரம்பூர், தற்போது திமுக வசம் உள்ளது. ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்தத் தொகுதி தேர்வு செய்யப்பட்டதாகக் கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பெரம்பூர் பிரச்சாரம் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
