“நான் ஃபிரிட்ஜ் கொடுக்க மாட்டேன் வேலை கொடுப்பேன்” – கிருஷ்ணகிரியில் சீமான் பேச்சு! – ntk coordinator seeman criticizes aiadmk manifesto during campaign

தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரை பணிகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றன. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு திருத்தணியில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், இன்றைய தினம் கிருஷ்ணகிரியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு உள்ளார்.

பரப்புரையின்போது அவர் பேசுகையில், ஆட்சி முறை அடக்குமுறை, பசி பஞ்சம், தீண்டாமை, ஏழ்மை, பெண் வன்கொடுமை, வள கொள்ளை இது எதும் இல்லாத ஒரு சமூகத்தினை உருவாக்கவே நாம் தமிழர் கட்சி போராடி வருகிறதாக கூறிய அவர், போராட்ட துணிவு இல்லாதவன் அடிமையாகிறான் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் பேசுகையில் ஊழல் நெஞ்சமற்ற நேர்மையான ஆட்சியை நமது முன்னோர்கள் தந்திருப்பதாகவும், அதற்கு உதாரணமாக ஓமந்தூரார் மற்றும் காமராஜர் ஆகியோரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் குடும்பம் கால் நூற்றாண்டுக்குள் நாட்டையே நாசமாக்கி விட்டதாக குற்றம் சாட்டிய அவர், கால் நூற்றாண்டுக்குள் நாட்டை நாசமாக்கி விட்டதாகவும் பேசினார்.
தொடர்ந்து “நமது முன்னோர்கள் காலத்தில் வீடு கட்டவில்லையா சாலை அமைக்கவில்லையா? அப்போது ஆற்று மணலை கொள்ளையடித்தார்களா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் மேலும் காமராஜர் காலத்தில் டி.வி மிக்சி, ஸ்கூட்டர், பிரிட்ஜ் தரேன் என வாக்குறுதி அளித்தார்களா? என கேள்வி எழுப்பிய அவர் நாட்டையும் நாட்டு மக்களையும் நமது முன்னோர்கள் ஏமாற்ற நினைக்கவில்லை நல்லாட்சி கொடுக்க வேண்டும் எனவே நினைத்தார்கள் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்போது எல்லாம் செல்போனையும், டிவி -யையும் பார்த்தால் பள்ளி மாணவர்கள் காலையிலேயே சாப்பாடு போட்டார்கள், கல்லூரி மாணவர்கள் ஐந்து வருடமாக பேருந்தில் இலவசமாக பயணிக்கிறார்கள், பெற்றோர்கள் அரசே எங்களுக்கு மடிக்கணக் கொடுத்து விட்டது, ஐந்தாயிரம் எங்கள் வங்கி கணக்கில் போட்டு விட்டார்கள் என பேசும் செய்திகள் வருகின்றன எனவும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “உணவு கொடுத்தார்கள், மடிக்கணினி கொடுத்தார்கள், பேருந்து இலவசமாக பயணிக்க வைத்தார்கள் ஆனால் படித்து முடித்தவர்களுக்கு வேலை மட்டும் கொடுக்கவில்லையா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் படித்து முடித்த பின்பு வேலை மட்டும் கொடுப்பதில்லை.வேலை கொடுப்பதுதான் நல்ல ஆட்சி என பேசி இருக்கிறார். தமிழ்நாடு தேர்வாணையத்தில் தேர்வு எழுதி பல லட்சம் பேர் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் ஐந்தாயிரம் பேருக்குத்தான் வேலை ஆனால் 50 லட்சம் பேர் வேலை இல்லாமல் வரிசையில் காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

சீமான் பேசியதன் பின்னணி

தொடர்ச்சியாக ஊழல் மற்றும் இலவசங்களுக்கு எதிராக பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்றைய தினம் நான் மக்களுக்கு இலவச குளிர்சாதன பெட்டி தர மாட்டேன் ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவேன் என பேசி இருப்பது அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மறைமுகமாக சாடி இருப்பதே சுட்டிக்காட்டுகிறது.
நேற்றைய தினம் 297 தேர்தல் அறிக்கைகள் நிரம்பிய புத்தகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருந்தார் அதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதிமுக செய்யப் போவதாக சொல்லும் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக செய்துவிட்டதாக சொல்லும் தேர்தல் வாக்குறுதிகளையும் குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்து தனது பரப்புரை பேச்சில் தெரிவித்திருந்தார்.

Source link