Edappadi Palanisamy About Symbol,கூட்டணி கட்சிகள் விரும்பும் சின்னத்தில் போட்டியிடலாம்..திமுக போல நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை : எடப்பாடி பழனிச்சாமி – edappadi palanisamy about small parties in nda alliance choosing thamarai symbol

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொகுதிகளை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சில காட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புவது குறித்தும் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி

முக்கிய அம்சங்கள்:

தாமரை சின்னத்தை விரும்பும் கூட்டணி கட்சிகள்

எடப்பாடி பழனிச்சாமி கருத்து

edappadi palanisamy about small parties
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பாஜகவிற்கு 27 தொகுதிகளையும் பாமகவிற்கு 18 தொகுதிகளையும், அமமுக கட்சிக்கு 11 தொகுதிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளையும் ஒதுக்கியிருக்கின்றனர். மேலும் இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் பாரதம் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2, 1, 1 ஆகிய தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருக்கின்றனர்.அந்தந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதனை தெளிவாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்துக்கிருக்கும் சிறு காட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் உட்பட ஜான் பாண்டியன், கே.சி திருமாறன் ஆகியோர் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுவது என்ற தங்களின் விருப்பத்தை தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கலந்து பேசினாராம். குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனிடம் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகின்றது. எதாவது ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால் அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாக தெரிகின்றது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதெல்லாம் அவரவர் விருப்பம் என கூறியிருக்கின்றார். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அவரவர் விருப்பப்பட்ட சின்னத்தில் போட்டியிடலாம். எங்கள் கூட்டணியில் அனைத்தும் ஜனநாயக முறைப்படியே நடந்து வருகின்றது.
திமுக கூட்டணியில் இருப்பது போன்ற கண்டிஷன் எல்லாம் இங்கு கிடையாது. அந்தந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார்களோ அந்த சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் பேசிய அவர், எங்கள் கூட்டணியில் அனைவரும் சமம். இந்த கட்சி சிறியது, அந்த கட்சி பெரியது என்ற பேச்சுக்கு எல்லாம் இங்கு இடமில்லை. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளும் பெரிய காட்சிகள் தான்.
அனைத்து கட்சிகளையும் நாங்கள் சரி சமமாக தான் பார்க்கின்றோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் பெரம்பூர் தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. அந்த பெரம்பூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து அதிமுக போட்டியிடவில்லை என்ற ஒரு கேள்வியும் எழுந்தது.
இதற்கு தான் எடப்பாடி பழனிச்சாமி, யார் நின்றால் என்ன ?எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சி அனைத்தும் பெரிய கட்சி தான் என கூறியிருக்கின்றார். மேலும் எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்துமே வாக்கு வங்கிகளை கொண்ட கட்சிகள். எனவே எதிர்ப்பு வாக்குகளும் எங்கள் கூட்டணிக்கு தான் வரும். திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே மக்களுக்காக போராடுகின்ற அதிமுக கூட்டணி கட்சிக்கே வாக்குகள் வரும்.
தமிழகத்தில் அதிமுகமீண்டும் ஆட்சியமைக்கும். குறிப்பாக எதிர்ப்பு வாக்குகள் மக்களுக்காக போராடுபவர்களுக்கு தான் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்காது என்றார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக மீண்டும் சீண்டியிருப்பதாக தெரிகின்றது.

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம் – CPM சண்முகம் பேட்டி

திமுக அரசால் கொந்தளித்து இருக்கும் மக்களின் வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும். எனவே எதிர்ப்பு வாக்குகளும் எங்கள் கூட்டணிக்கு தான் கிடைக்கும்.மக்களுக்காக போராடும் எங்களுக்கு தான் எதிர்ப்பு வாக்குகளே தவிர வீட்டிலேயே இருப்பவர்களுக்கு கிடையாதது என எடப்பாடி மறைமுகமாக பேசியிருக்கிறார். இவர் விஜய்யை தான் மறைமுகமாக பேசுகின்றார் என மக்கள் கூறி வருகின்றனர்