கோவிலுக்கு நேந்தி வைத்தது போல தொடரும் பலி.. – விஜய் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்த எஸ்.வி.சேகர் ! – s.v. sekhar criticizes tvk leader vijay, stating that he should not blabber whatever comes to his mind

தவெக தலைவர் விஜய் வாய்க்கு வந்தெல்லாம் உளக்கூடாது என எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் – விஜய்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு மற்றும் வாக்குறுதிகள், பிரச்சாரம் அடுத்தடுத்து நடைபெற உள்ளதால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி 2014 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

அதேபோல், அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும் தன்னுடைய மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மார்ச் 28 முதல் விஜய் பிரச்சாரம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 தேர்தலில் தவெக தனித்து தான் போட்டி என அறிவிப்பு

மேலும் மார்ச் 30-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக, அதிமுக, பாஜக ,காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்கழகம் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த போதிலும் எந்த ஒரு கூட்டணி கட்சிகளும் இணையாததால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.மார்ச் 27 ஆம் தேதி அன்று மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் விஜயின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து வரும் எஸ் வி சேகர் தற்பொழுது விஜய் வாய்க்கு வந்தது எல்லாம் உளறக்கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் சந்தித்த எஸ் .வி .சேகர் பேசுகையில், விஜய் மக்களிடம் இலவசம் வாங்க வேண்டாம். ஆயிரம் ரூபாய் வாங்க வேண்டாம் என்று சொன்னவர் தமிழ்நாட்டில் பிறக்கின்ற ஒரு ஒரு குழந்தைக்கும் ஒரு பவுன் தங்க மோதிரம் போட முடியுமா? தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 2000 குழந்தைகள் பிறக்கின்றது. இப்போ ஒரு வருடத்தில் எத்தனை குழந்தைகள் பிறக்கிறது.
குழந்தை பிறப்பதற்கு சனி ஞாயிறு என்று விடுமுறை எல்லாம் கிடையாது. அதிபர் ட்ரம்பிடம் அவ்வளவு தங்கம் கிடையாது. இதனை விஜய் எப்படி செய்வது. விஜய் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகிறார்.சினிமா களம் வேறு.. அரசியல் களம் வேறு.. இந்து நிமிடம் வரை விஜய் உணரவில்லை. திமுக தீய சக்தி.. திமுக தீய சக்தி.. என்று கூறிக்கொண்டு, அவர் பேசிய மீட்டிங்கில் 41 பேர் உயிரிழந்தது, சமீபத்தில் சேலத்தில் நடந்த பரப்புரையில் ஒருவர் உயிரிழந்தது, அவரை பின்தொடர்ந்து இளைஞர் ஒருவர் சிகிச்சை பலர் இன்று உயிரிழந்தது உள்ளிட்டவை எல்லாம் பார்த்தால் கோவிலுக்கு நேந்தி விட்டதை போல், பலி கொடுத்துக் கொண்டே செல்கிறார். இவர் எப்படி மக்களை வாழ வைப்பார் என்று தெரியவில்லை.
இவரிடம் வந்து சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் பிற கட்சிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் வேறு வழி இல்லாமல் இங்கே வந்து ஒட்டிக் கொண்டவர்கள். எப்படி இருப்பவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் ஓட்டு வாங்க முடியும். விஜய் வெற்றி பெற நினைப்பவர்களை தடுக்கிறார். ஆனால் திமுகவிற்கு எதிர்ப்பு ஓட்டி இருக்கிறது. இதில் எதிர்ப்பு யாருக்கு அதிமுக தான். அதிமுகவின் ஓட்டுகளை தான் விஜய் பிரிப்பார் என்று கூறினார்.
தவெக தலைவர் விஜய் இதுவரை பிரச்சாரத்திற்காக நேரடி களத்தில் வரவில்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு? விஜய் எவ்வளவு பெரிய வேலைகளை செய்து வருகிறார் சமூகத்தில் மும்பையில் நடந்த வளைகாப்பிற்கு சென்றுள்ளார். பிரச்சாரத்திற்கு விஜயின் வரவேண்டும் அனைவரின் வீட்டிலும் விஜய் இருக்கிறாரே.. ஆனால் அவர்களுக்கு 18 வயசு ஆகவில்லை. அவர்களுக்கு ஓட்டு இல்லை என்று கூறினார். மேலும் விஜய் உளறுவதில் உச்சகட்டமான உளரல்.
அரசியலே தெரியாமல் சினிமாவில் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசிக்கொண்டு சத்தமாக சத்தமாக பேசுவது எல்லாம் பார்த்தால் சினிமாவில் கைதட்டுவார்கள். ஆனால் அரசியலில் முடியாது. அனைத்து கட்சிகளும் தாய்மார்களே ஓட்டு போடுங்க என்று ஏன் கூறுகிறார்கள்.. தாய்மார்களின் பொறுப்புணர்ச்சி அவர்கள் பணத்தை பறிக்கின்ற குழந்தைகளுக்கு கிடையாது.. தாய் தந்தை செலவு செய்யும் பணத்தை பொறுப்பில்லாமல் இருக்கிறார்களோ.. அந்தப் பிள்ளைகள் தான் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக உள்ளனர் என்று பெருமையாக விமர்சித்தார். அவர்களுக்கு தமிழக அரசியல் குறித்து இருவரும் தெரியாது என்று கூறினார்.