வடசென்னை வளர்ச்சி யாருடைய சாதனை?எடப்பாடி குற்றச்சாட்டு- உடனே அமைச்சர் சேகர் பாபு கொடுத்த ரியாக்‌ஷன்! – minister sekar babu responds edappadi alleges in north chennai development achievement

மத்தியில் ஆட்சி அமைத்து அமைத்துள்ள கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏன் நீட் விலக்கு அழுத்தம் தரவில்லை என அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பினார்.

சேகர்பாபு vs எடப்பாடி(புகைப்படங்கள்Samayam Tamil)
சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய பரப்புரையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்தித்து பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அந்த திட்டத்தால், பாதுக்காக்கப்பட்ட குடிநீர்,தடையில்லா மின்சாரம்,அரசு மருத்தவமனைகள், துணைமின் நிலையங்கள் என எண்ணில் அடங்காத திட்டங்களை வட சென்னைக்கு கொண்டு வந்தார்.

வடசென்னை வளர்ச்சி திட்டங்கள்

முதல்வர் படைப்பகங்கள், அறிவுசார் மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள், முதலமைச்சர் சமுதாய மண்டபங்கள் என கணக்கில் அடங்காத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.5 ஆண்டுகளில் வட சென்னையில் மட்டும் 3 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் திநகர் மேம்பால திமுக ஆட்சி காலத்தில் தான் திறக்கப்பட்டது. வட சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமி பார்க்க வேண்டும்.மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் 1000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிக்கால் அமைக்கப்பட்டது.ஆனால் 2021 பெய்த மழைநீரில் சென்னை தத்தளித்தது.அப்போது முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.ஆனால், அதிமுக ஆட்சியில் மழை வெள்ள பாதிப்பில் கூட மக்களை சந்திக்காதவர் எடப்பாடி பழனிசாமி.திமுக அரசால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை நகல் எடுத்து தேர்தல் அறிக்கை என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.மேலும், கொரோனா காலக்கட்டத்தில் அனைவரின் உயிரை காப்பாற்றியவர்.அப்போது அசாதாரண சூழலில் 5000 ஆயிரத்தை வழங்கினார்.பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி ஏன் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

முன்னதாக தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 25ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கினார் அப்போது பேசிய அவர் அதிமுக தலைமையிலான இந்திய கூட்டணி நிச்சயம் 210 இடங்களில் வெற்றி பெறும். அந்த வகையில் 23 வேட்பாளர்கள் பட்டியலை முதற்கட்டமாக அதிமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மொத்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.
மேலும் திமுக கூட்டணி அமைப்பதற்கு நீண்ட காலமாக போராடியது திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் மன உளைச்சலில் இருப்பதாக கூறினார். மேலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக தொகுதிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளும் திமுக ஒதுக்கி உள்ளது. மேலும் திமுகவை நம்பியவர்கள் நடுத்தெருவுக்கு வரும் சூழல் உள்ளது. இனியாவது அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தேமுதிகவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் மறைமுகமாக விமர்சித்தார். கடந்த திமுக ஐந்தாண்டு கால ஆட்சி என்பது பயனில்லாத ஆட்சி.

திமுக அரசியலில் ஊழல் அரசியல் வரி உயர்வு..

குறிப்பாக ஊழல் அரசியல் ,வரி உயர்வு ,குடும்ப அரசியல் உள்ளிட்டவைகள் மட்டுமே நடந்துள்ளது வளர்ந்துள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் பெரியதாக செயல்படுத்தப்படவில்லை என்று விமர்சித்தார்.மேலும் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை தொடர்ந்து குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளன பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது என்ற விமர்சித்தார்.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாயும் ஆண்களுக்கு இலவச பயணமும் ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.