மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 28-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மைல்கல்லாக, முதன்முறையாக ஐபிஎல் 2026 தொடரில் அனைத்து 10 அணிகளும் இந்திய கேப்டன்களின் தலைமையில் களம் இறங்குகின்றன.
மும்பையில் நடந்த அதிகாரப்பூர்வ கேப்டன்கள் சந்திப்பில் 10 அணி கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்தனர்.
