Kongu Eswaran About Edappadi Palanisamy,தாமரை சின்னத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள்…பாஜகவின் மிகப்பெரிய சூழ்ச்சி..எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த ஈஸ்வரன் – kongu eswaran gave warning to eps on alliance parties symbol issue

திமுக கூட்டணி காட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனை மறுத்துள்ளார் கொங்கு ஈஸ்வரன். அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும் அவர் எச்சரித்து பேசியிருக்கிறார்

முக்கிய அம்சங்கள்:

பாஜகவின் சூழ்ச்சி

எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த ஈஸ்வரன்

kongu eswaran warning
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் ஒன்று தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. இக்கட்சிக்கு இம்முறை இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்கியிருப்பதாக தெரிகின்றது. கூட்டணியில் பல புதிய காட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதியை குறைத்துக்கொள்ளுமாறு திமுக கேட்டதாகவும், அதற்கு கொங்கு ஈஸ்வரன் உடன்பட்டு இரண்டு தொகுதிகளை பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் இரண்டு தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிட இருப்பதாகவும் தெரிகின்றது.இதுபோன்ற திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் பலர் தனி சின்னத்தில் போட்டியிடாமல் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகின்றனர். எனவே திமுகவின் கட்டாயத்தின் பெயரில் இதுபோல நடக்கிறதா ? என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. மதிமுகவினர் ஒரு தொகுதியில் கூட தனி சின்னத்தில் போட்டியிடாமல் இருப்பது வருத்தமே என தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் இப்படி ஒரு விமர்சனம் திமுக மீது எழுந்து வருகின்றது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இந்த விமர்சனங்களை முன் வைத்து தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்துகொங்கு ஈஸ்வரன் விளக்கம் கொடுத்திருக்கின்றார். அவர் கூறியது, திமுக எங்களை மட்டுமல்ல வேறு எந்த ஒரு தோழமை கட்சிகளையும் கட்டாயப்படுத்தவில்லை. உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
இது பரஸ்பர புரிதலில் எடுக்கப்பட்ட முடிவு. இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்த எடுத்த முடிவே தவிர கட்டாயத்தினால் எடுத்த முடிவு அல்ல. மிக முக்கியமாக வெற்றிவாய்ப்புகளை கருத்தில் கொண்டே இந்த முடிவு திமுக கூட்டணியில் எடுக்கப்படுகின்றது. ஆனால் மறுபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகசின்னத்தில் போட்டியிடுமாறு எடப்பாடி கூட்டணி கட்சிகளை கேட்டுக்கொண்டு வருகின்றார். ஆனால் கூட்டணி காட்சிகள் பாஜக சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என சொல்கின்றனர்.
எனவே அந்த கூட்டணியில் தான் குழப்பம் நீடித்து வருகின்றது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளை கட்டாயப்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு என்று ஒரு அடையாளம் உள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என தெரியவில்லை. ஒருவேளை தேர்தலுக்கு பிறகு பாஜகவினர் மிகப்பெரிய திட்டம் எதாவது வைத்திருக்கலாம்.
அதன் காரணமாக தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட பாஜக வலியுறுத்தலாம். ஏன்னென்றால் இந்த சட்டமன்ற தேர்தலுக்காக இரண்டு முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். ஆனால் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என அவர் குறிப்பிடவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போதும், தற்போது கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புவதை பார்த்தும் ஏதோ ஒரு சூழ்ச்சி இருந்து வருவதாக தெரிகின்றது.
பாஜக மிகப்பெரிய சூழ்ச்சியை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் கொங்கு ஈஸ்வரன். இந்நிலையில் கொங்கு ஈஸ்வரன் சொன்னதை போல இந்த சந்தேகம் ஒரு சில பொதுமக்களிடமும் இருந்து வருகின்றது. பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என கூறவில்லை. அதிமுக தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும் என சொல்லவிலை என பலர் கூறி வந்தனர்.

திமுக கூட்டணியில் தேமுதிக…மக்கள் கருத்து இது தான்?

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர். அவரது தலைமையில் தான் ஆட்சி அமையும் என கூறி வந்தனர். இருந்தாலும் திமுகவினர் தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகின்றனர். என்ன இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து பேசி வருவதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.