தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்திய ஈரான் கால்பந்து வீரர்கள்

அந்தல்யா,

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில், ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு, அந்நாட்டு கால்பந்து வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

துருக்கியில் உள்ள அந்தல்யாவில், நைஜீரியா அணிக்கு எதிரான நட்புமுறை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது.

Also Read
“உங்களுக்கென்ன ஆச்சு?… ‘ஸ்கூல் கிட்ஸ் மாதிரி’ – செய்தியாளர் சந்திப்பில் பொறுமை இழந்த வார்னர்
தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்திய ஈரான் கால்பந்து வீரர்கள்

உயிரிழந்த குழந்தைகளை நினைவுகூரும் வகையில், ஈரான் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது, வீரர்கள் அனைவரும் தங்கள் கைகளில் பள்ளிப் பைகளை ஏந்தியபடி நின்றனர். மேலும், துக்கத்தின் அடையாளமாக வீரர்கள் கருப்பு நிற கைக்கட்டுகளை (Black Armbands) அணிந்திருந்தனர்.

Source link