நடிகர் விஜய்யை வைத்து ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதையாக கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து, வம்சி அடுத்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இருந்தார்.
சல்மான் கான் இறுதியாக நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. சல்மான் கானே இத்தோல்விக்கு காரணம் என ஏ. ஆர். முருகதாஸ் கூறியிருந்தார். இதற்கு, சல்மான் தரப்பிலிருந்தும் முருகதாஸுக்கு பதிலடி கிடைத்தது. தமிழ் இயக்குநர் படத்தில் தோல்வியைச் சந்தித்த சல்மான் கான், தெலுங்கு இயக்குநரிடமாவது ஹிட் கொடுப்பாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஷாருக்கான், அமீர்கானை விட சல்மான் கானுக்குத்தான் பாலிவுட்டில் ரசிகர்கள் அதிகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தனது ரசிகர் வட்டத்தை அதிகளவில் சல்மான் கான் இழந்து வரக் காரணமே இயக்குநர்களையும் படங்களையும் அவர் தேர்வு செய்யும் விதம் தான் எனக் கூறுகின்றனர். படம் வெளியாவதற்கு முன்னதாக சல்மான் கானை இயக்குநர்கள் புகழ்வதும், வெளியான பின்னர், அவரை வைத்து ஷூட்டிங்கே பண்ண முடியாது என புலம்புவதும் தொடர்கதையாக மாறியுள்ளது. மகேஷ் பாபுவுக்கு மகரிஷி படத்தைக் கொடுத்து வெற்றிக் கண்ட தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில்தான் அடுத்து சல்மான் கான் நடிக்க போவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் வம்சி கூட்டணி புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தில் ராஜுதயாரிக்க உள்ளார். வரும் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்க போவதாக சல்மான் கான் அறிவித்துள்ளார்.
